Friday, May 9, 2014

நீ பட்ட அடிமைத்தனம் களைந்திட துணிந்தே நில்

எதுகை மோனையில்
எழுதிக் கோர்த்தாலும்
மாறுவதில்லையே
மூடன் மனம்

வீரம் கலந்து
உணவைக் கொடுத்தாலும்
ஓடுவதோ
மதுவில் தினம்

மயங்கி அட
அறிவைத்தொலைத்தாய்
சுயத்தின் சுதந்திரம்
கெடுத்தாய்

கோழையாய் சந்ததி
படைத்தாய்
துணிச்சலை உனக்குள்
தொலைத்தாய்

நீ செய்ய வேண்டியதை
யார் செய்வார்
எழுந்து நில்

நீ பட்ட அடிமைத்தனம்
களைந்திட
துணிந்தே நில்


        
                                            கவிதை யாத்தவர்     GJ Thamilselvi

No comments: