Sunday, May 11, 2014

தங்கை நிலவுக்கு


போகட்டும் விட்டுவிடு
தங்கை நிலவே
உனை கரியமில வாயுவால்
கறைப்படுத்திட முடியாது

மனம் தின்றுப்போனவனை
பிணம் திண்ணியென்றென்னி
குணம் மாறு மகளே
உனை குறை கண்ட கண்ணுக்கு
குறையுள்ளதென்றெண்ணி
மனம் மாறு மகளே

வாய்மொழியால் ஆறுதலை
வகைவகையாய் யாரும் சொல்வார்
வாய்ப்புண் உள்ளவனுக்கே
வலி வேதனை தெரியுமென்று
நானும் அறிந்த ஒன்றுதான்

ஆறுதலாய் நினைக்காதேஅண்ணனின
அக்கறையாய் யோசி
மாறுதலென்பது
மாறாத ஒன்றல்ல

உனக்கான வானமும்
உனைச்சுற்றிய வின்மீண்களும்
உன்வரவு நோக்கும் தென்றலும்
அமாவாசையால் அசைவற்றுக்கிடக்கிறது

போகட்டும் விட்டுவிடு
உன் வாழ்வு வானத்தை
கீறி விதையிடு
பூக்கட்டும் மீண்டும்
புதிய பௌர்ணமிப்பூ.......
                                                                             தமிழ்ப்ரியன் நசீர்

No comments: