Thursday, May 22, 2014

பக்க தாளம் போட்டு போற்றுபவர்கள்

யார் வெற்றி பெற்றார்
எப்படி வெற்றி பெற்றார்
எதற்காக வெற்றி பெற்றார்
வெற்றி பெற்று விட்டார்

பெரும் செல்வந்தர்களுக்கு வெற்றியே குறிக்கோள்
வெற்றி பெற்றவருக்கு பக்க தாளம் போட்டு போற்றுவார்கள்
இருக்கும் செல்வம் இல்லாமல் போக காபந்து செய்வதற்க்கும்
இருக்கும் செல்வத்தை பல மடங்கு ஆக்குவதற்கும் போற்றிப் புகழ்வதில் அவர்கள் தயங்குவதுமில்லை .கூச்சப் படுவதுமில்லை

பரம ஏழைகள் எவர் வெற்றி பெற்றால் நமக்கென்ன
ஒருவரும் நமக்கு ஒன்றும் செய்யப் போவதில்லையென தம் வேலையை தொடர்கிறார்கள்

இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளவர்கள்
இரண்டையும் பற்றி ஆய்வு செய்து தனக்கு இன்னும் கேடு விளைவித்துக் கொள்கிறார்கள்

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

அருமையாக சொன்னீர்கள்! நன்றி!