Thursday, April 17, 2014

நீ இருக்குமிட மெல்லாம் மகழ்வைத் தருகின்றது

உன் கூந்தலில்  சூட்டிய மல்லிகையின் மணம்
உன் வரவைக் காட்டுகிறது

உன் கண்களின் கனிவான பார்வை
உன் இறைபக்தியை காட்டுகிறது

உன் நெற்றியில் உள்ள குறி
உன் தொழுகையின் ஈடுபாட்டைக் காட்டுகிறது

உன் சோர்வு
உன் உடலின் நலமற்ற தன்மையை காட்டுகிறது

உன் இதயத்தின் இருள் நிறைந்த சோர்வு
உன் பாவமான செய்கையால் உன் முகத்தில் சோகத்தைக் காட்டுகிறது

உன் புன்னகை
உன் மகிழ்வைக் காட்டி மகிழ்விகின்றது

உன் பழகும் செயல்பாடு
உன்னை உயர்வாக்கி சிறப்பைத் தருகிறது

நீ இருக்குமிட மெல்லாம் மகழ்வைத் தருகின்றது
நீ இல்லாத இடமெல்லாம் மகிழ்வு குறைகிறது

உன் வரவை விரும்பி நிற்கும் மக்கள்
உன் வரவால் நிறைவு கொள்கின்றனர்

நல்லதை நறுக்காக நயமாக கனிவாக சொல்வாய்
நற்சொர்களை கேட்க நினைவாக மனதில் நிறுத்தி வாழ்வில் செயல்படுத்துவாய்

தீய எண்ணங்கள் உன்னை தீண்டாது
நற்பண்புகள் கொண்ட மேன்மக்கள் உன்னை நாடி வருவர்\

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

வரிகள் உண்மை...