Showing posts with label சோர்வு. Show all posts
Showing posts with label சோர்வு. Show all posts

Thursday, April 17, 2014

நீ இருக்குமிட மெல்லாம் மகழ்வைத் தருகின்றது

உன் கூந்தலில்  சூட்டிய மல்லிகையின் மணம்
உன் வரவைக் காட்டுகிறது

உன் கண்களின் கனிவான பார்வை
உன் இறைபக்தியை காட்டுகிறது

உன் நெற்றியில் உள்ள குறி
உன் தொழுகையின் ஈடுபாட்டைக் காட்டுகிறது

உன் சோர்வு
உன் உடலின் நலமற்ற தன்மையை காட்டுகிறது

Friday, September 13, 2013

தாழ்மையான எண்ணத்தில் தனித்து விடப்பட்டேனோ!

ஏன் நான் கூட்டதில் தனிமைப் படுத்தப்பட்டதாக நினைக்கிறேன்

ஏன் நான் சிரித்துக் கொள்கிறேன் ஆனால் அதனை அனுபவிக்காமல்

ஏன் நான் உறங்குகிறேன் சோர்வு உடலில் இல்லாமல்

ஏன் நான் காரணமில்லாமல் நேர்மையற்றவனாக  இருப்பதாக நினைக்கிறேன்

ஏன் நான் மற்றவருக்கு பெரும்பாலும் நிழல் போல் இருப்பதாக நினைக்கிறேன்

ஏன் நான் என் வாழ்க்கை என்னுடைய வாழ்க்கையாக நினைப்பதில்லை

ஏன் நான் என் கால் தடங்கள் மணலில் இருப்பதாக உணர்கிறேன்

ஏன் நான் எனக்கு தேவையானதை போதுமானதாக கிடைக்கவில்லை என்ற நினைப்பில் இருக்கிறேன்

ஏன் நான் காலம் என்ற அலைகள் அதனை நிறைவு செய்யும் என்று காத்திருக்கிறேன்

ஏன் நான் என் பார்வையில் என்னையே இழந்ததாக கருதுகிறேன்

ஆனால் நான் அறிகிறேன் நான் நீண்ட தூரம் கடக்க வேண்டும் எனது நிறைவான புன்னகையை பரப்புவதற்கு