Saturday, March 30, 2013

நமது முதல் நூல்: “வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?” – வெளி வந்து விட்டது!

நமது இணைய தளத்தில் முஸ்லிம்களின் நம்பிக்கைகள் குறித்த 24 கட்டுரைகளை தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கின்றோம்.

மேற்கண்ட 24 கட்டுரைகளையும் இணைத்து “வாழ்க்கை என்பது இவ்வளவு தானா?” எனும் தலைப்பில் ஒரு நூல் அல்லாஹ்வின் பேரருளால் வெளி வந்து விட்டது!

இந்நூல் யாருக்காக?

இஸ்லாத்தை அறிந்து கொள்ள விரும்பும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு! முஸ்லிம்கள் எவற்றை நம்புகிறார்கள்? ஏன் நம்புகிறார்கள்? எந்த சான்றுகளின் அடிப்படையில் அவற்றை நம்புகிறார்கள்? – என்பதை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு!


புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு! அவர்கள் தாங்கள் எவற்றை நம்பிட வேண்டும்? ஏன் நம்பிட வேண்டும்? – என்பதை அறிந்து கொள்ள!

முஸ்லிம் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும்! இயல்பாக அவர்கள் உள்ளத்தில் எழுகின்ற சந்தேகங்களை நீக்கிக் கொள்வதற்காகவும், மற்றவர்களின் சந்தேகங்களைப் போக்கிடவும்!

முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் மற்றும் அழைப்பாளர்களுக்கும்! கல்விப்பணியிலும் அழைப்புப் பணியிலும் உதவிடுவதற்காக!

வாங்கிப் படியுங்கள்! படிக்கக் கொடுங்கள்!!

கிடைக்குமிடம்:

மன்சூர் கைலி சென்டர்

13/07, காந்திஜி ரோடு

மயிலாடுதுறை – 609 001

அலைபேசி: +91-9443402721

நூலின் விலை: ரூ 70/=

(மொத்தமாக வாங்குபவர்களுக்கு தக்க கழிவு உண்டு)

http://www.thegardenacademy.in/?p=2087

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...