Monday, May 7, 2012

எதிலும் முழுமை இல்லை.

முழுமையாக நம்பி முற்றிலும் ஏமாற்றமோ!
முழுமையாக நேசம் கொண்டு பாசம் போனதோ!
முழுமையாக கிடைக்க எத்தனித்து இருந்ததும் போனதோ! 
முழுமை கிடைக்க முதுமை வந்துவிடுமோ!

நம்பிக்கை வைத்து நடை போடு அவசரப்பட்டு தடுக்கி விழுந்து விடாதே!
அன்பு செலுத்து அதை மற்றவரிடமிருந்து எதிர் பார்க்காதே! 
நம்பிக்கை கொள் நடப்பது நடந்தே தீரும் என்ற எண்ணத்தோடு! 
வேண்டியது கிடைக்கவில்லையெனில் அதுதான் நியதி!

எதிலும் முழுமை இல்லை.
முழுமையாக கிடைத்தால் உன்னை நீ மறப்பாய்.
முதுமை கிடைத்தாலும்
முழுமை கிடைக்காது

இறப்பில்தான் முழுமை உண்டு அது பிறப்பிலும் இல்லை.
இறைவனின் ஆற்றலை நம்பு உண்மை விளங்கும்.
இயன்றதைச் செய் மற்றதை இறைவனிடம் விட்டு விடு
இறைவனை நேசி இன்பம் காண்பாய்.

1 comment:

ஸாதிகா said...

அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான வாழ்க்கை தத்துவத்தை கவி நடையில் பொழிந்திருப்பது அருமை.தொடருங்கள்.