Monday, July 19, 2021

கடைசி பிரசங்கம் (A Message to Humanity) புனித மக்கா மாநகரில்

 Vavar F Habibullah



கடைசி பிரசங்கம்

(A Message to Humanity)

புனித மக்கா மாநகரில்

அமைந்த அரபாத் மலைமீது

 நின்று பல்லாயிரம் ஹாஜிகள்

முன்னிலையில் முகமது நபி

நிகழ்த்திய வரலாற்று

சிறப்பு மிக்க பேருரை

அரங்கேறிய நாள்

அரபாத் தினமாகும்.

முஸ்லிம்கள் மத்தியில்

முகமது நபி ஆற்றிய அந்த

சிறப்புரைத் தான் என்ன!

அருமை மக்களே!

காது கொடுத்து நான்

சொல்வதை கேளுங்கள்.

அடுத்த ஹஜ்ஜுக்கு நான்

இருப்பேனா என்பது தெரியாது!

எனவே நான் சொல்வதைக்

கேட்டு, பிறருக்கும் சொல்லுங்கள்.

உங்கள் உயிரும்,செல்வமும்

இறைவன் தந்த டிரஸ்ட் ஆகும்.

உங்களுக்கு உரிமை இல்லாத

வற்றை அவற்றுக்கு உரிமையுள்ள

வர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்.

இறைவன் தடுத்த வட்டியை

ஒரு போதும் வாங்காதீர்கள்.

வழி கெடுக்கும் சாத்தானை

விட்டும் உங்களை பாதுகாத்து

கொள்ளுங்கள்.

என் அருமை மக்களே!

நான் சொல்வதை சற்று

கவனமாக கேளுங்கள்.

இறைவனை வணங்குங்கள்

ஐவேளை தொழுகையை

தவறாது கடை பிடியுங்கள்.

நோன்பு காலத்தில்,நோன்பை

கடை பிடித்தொழுகுங்கள்.

செல்வ வரியை (ஜகாத்)

ஏழைகளுக்கு சரியாக

கொடுத்து வாருங்கள்.

பொருள் வசதியுள்ளோர்

ஹஜ் கடமையை நிறைவு

செய்யுங்கள்

உங்கள் இறைவன் ஒருவனே!

உங்களின் தந்தையும் ஒருவனே!

நீங்கள் அனைவரும்

ஆதத்தின் பிள்ளைகளே!

ஆதமோ களி மண்ணால்

படைக்கப் பட்டவன்.

இறையச்சம் உள்ளவனே

உங்களில் உயர்ந்தவன்.

ஒரு அரபி தேசத்தவன்

மாற்று தேசத்தவனை

விட உயர்ந்தவன் இல்லை.

கறுப்பு நிறத்தவன் எவரும்

வெள்ளை நிறத்தவரை விட

தாழ்ந்தவர் இல்லை.

இனத்தில்   நிறத்தில்

உயர்வு தாழ்வு இல்லை.

இறை அச்சம் கொண்டவர்

நற்செயல் புரிவோர்

மட்டுமே உயர்ந்தவர் ஆவர்.

எனவே உங்களுக்கள் அநீதி

இழைத்துக் கொள்ளாதீர்.

இறந்த பின்னர் இறைவன்

முன்னால் நீங்கள் மீண்டும்

எழுப்பப் படுவீர் என்பதை

நினைவில் வையுங்கள்.

பெண்களை மதியுங்கள்

கண்ணியமாக நடத்துங்கள்.

எவரையும் சொல்லால்

செயலால் புண் படுத்தாதீர்

இன்றைய தினம் நான்

உங்கள் மார்க்கத்தை

பூர்த்தி செய்து விட்டேன்.

எனது அருட் கொடைகளை

நிறைவு செய்து விட்டேன்

இஸ்லாம் மார்க்கத்தை

உங்களை நேர்வழி படுத்தும்

மதமாக அங்கீகரித்து விட்டேன்

இதற்கு இறைவனே சாட்சி.



dr.habibullah

Former Member

TAMILNADU STATE

HAJJ - COMMITTEE

Government of Tamilnadu

Former Member

Enquiry Committee

TAMILNADU WAKF- BOARD

Government of Tamilnadu


No comments: