Wednesday, July 21, 2021

இறை சிந்தன Eid-ul- adha Mibarak தியாகத் திருநாள் ஈத் அல்-அழ்ஹா

 Noor Saffiya

💞 இறை சிந்தன

          Eid-ul- adha Mibarak

          தியாகத் திருநாள்                          

           ஈத் அல்-அழ்ஹா

                     🕋  عيد الأضحى مبارك   🕋  

              ..... 🌹﷽🌹 .....    

 ┈┉┅━❀••🍃🌸🍃••❀━┅┉┈ 

                 🌨️ كل عام وانت بخير🌨️

                    بارك الله في معيشتكم!

                        🌹الحَمْدُلله🌹   

              اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ

                  🌹 تقبل الله منا ومنكم🌹

                     📖  عملا صالحا  📖 

┈┉┅━❀••🍃🌸🍃••❀━┅┉┈

தொழுகை நிறைவேற்றி

தந்த துய்யோனே !

தொற்று நோய் பரவலிலே!

தொற்றினேன் உன்னிலே!

தொற்றாமல் காத்தாயே!

தொடராமல் காப்பாயே!

பற்றி பிடித்ததும் பற்றினாயே!

படைப்பினத்தினிலேயே!

பாதுகாவலன் நீயானாயே!

பாரில் சுற்றும் பலாயை!

பரிசுத்தமாக்க தரிசித்தாய்!

ப்ரசித்தமாய் ப்ரதிபலித்தாய்!

படைப்பின் பொக்கிஷமானாய்!

பார்ப்பதில் ரசித்ததும் நீ தானே!

புரிந்திருப்பாய் என்றாய்!

பயம் எனும் கொடிய நோய்!

பயபக்தியாய் ஆக்கினாய்!

பாசம்,பணிவின் படிப்பினையாக்கினாய்!

பொறுமையின் சிகரமாய்!

பசியும்,பஞ்சமும் புரிந்திடவே!

பகிர்ந்தாய் பரவலாய்!

போதும் யா ரப் நிறுத்திடு!

         والمجاهد من جاهد نفسه في طاعة الله

உனக்கு கட்டுப் படுவதில் தன்!

உள்ளத்துடன் போராடியவரே தியாகி (ஷஹீத்) என்றாய்!

உண்மை ஹக் நுழைந்ததே!

உத்தமர் வாழ்வு ஜொலித்ததே!

🕋🕋🕋🕋🕋🕋🕋🕋

முழுமையாய் 9️⃣ நாளும்!

முஹப்பதோடு வைத்து

முஹம்மதில் கலந்தோம்!

முத்தினை ஞான கடலிலே!

முழுவதுமாய் குளித்தோம்!

முழு மனதாய் எடுத்தோம்!

பசியும் தெரியலையே!

பகலும் தெரியலையே!

இரவும் தெரியலையே!

இறைரசூலின்

 எல்கையிலே!

                               🌹الحمد لله! شكرا لله🌹

   🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

இல்லம் மஸ்ஜிதானதே!

இதயம் முழுநிலவானதே!

இருள் விரண்டோடியதே!

இன்பம் குடிகொண்டதே!

உறவு பலமானதே!

உரிமை பாலமானதே!

உண்மை வெளியானதே!

உற்றார் புகழாரமானதே!

உன்னதம் நிலையானதே!

பற்றற்ற துன்யாவானதே!

பற்றியது நிலையானதே!

பற்றே தாத் ஆனதே!

பற்றும் பாசகரம் நபியானதே!

அறுக்கும் திருநாளானது!

அறுத்திடு உன் ஆசை!

அரித்திடு உன் தீயதை!

அகத்திழு உன்னுள் நன்மையே!

(அகம் +இழு)

இபுறாஹீமின் ஈமான்!

இஸ்மாயிலின் உறுதி!

ஜிப்ரீலின் வருகை!

இன்ப தக்பீர் இயம்பியதுமே!

அய்யாமுத் தஷ்ரீக் தக்பீர் .

                   اللّهُ أكبر اللّهُ أكبر اللّهُ أكبر!

                   لا إلَهَ الا اللّه!  اللّهُ أكبر!

                   اللّهُ اكبر!  ولِلّه الحمدَ !

                  اللّهُ أكبرُ كَبيِرَا وَالحَمدُ لِلّهِ كَثِيرا

                 وَسُبحَان اللّهِ بكرَةً وَأصْيِلا!

                  لا إلَهَ الا اللّه!  اللّهُ أكبر!

                  اللّهُ اكبر و لِلّه الحمدَ !

                 لا إلَهَ الا اللّه!  صَدَقَ وَعدَه!

                 وَنَصَرَ عبده !  وأعزَ جُنَده! 

                  وَهزم الأحْزَابَ وحْدَه!

                 لا إلَهَ الا اللّه!

                  وَلا نَعبُد الا أياه

                 مُخلِصِّينَ لَهُ الدّيِنَ

                 وَلوْ كَرِهَ الكَافِروُن!

                  لا إلَهَ الا اللّه! اللّهُ أكبر!

                  اللّهُ اكبر و لِلّه الحمدَ !

                   اللّهمَ صَلِّ على سيْدنَا مُحَمد!

                   وَعَلى آلِ سيْدنَا مُحَمد!

                   وَعَلى اصْحَابِ سيْدنَا مُحَمد!

                   وَعَلى أنصَارِ سيْدنَا مُحَم!

                   وَعَلى أزوَاجِ سيْدنَا مُحَمد!

                   وَعَلى ذُرِّيَةِ سيْدنَا مُحَمد!

                   وَسَلّم تَسْلِيماَ كَثّيرا

🕋🐪🕋🐂🕋🐑🕋🐐

பாவம் பஞ்சாய் பறந்ததே!

பரிதாப நிலை மாறியதே!

பணிவோடு ரிஜ்கி வாசல் திறந்தாய்!

பக்ரீத் திருநாள் கொண்டாடியதை!

பார்த்தாய் சுவைத்தாய்!

பரவசமாய் சொல்லிய

பல தேச குரல்களிலே!

பேரின்ப தல்பியாவுமே!

புன்னகை முகத்துடனே!

பூத்து மலராய் சொரிந்ததே!

                        لبيك اللهم لبيك!

                        لبيك لا شريك لك لبيك!

                       إن الحمد والنعمة لك والملك،

                       لا شريك لك لبيك

                 .     لبيك اللهم لبيك!

பதுருசஹாபாக்கள்

பாச நபியில்

பகிர்வது போல்!

பற்பல ஸிர்ருகளை

பகிர்ந்தோம் உன்னிலே!

பின்னி  பிணைந்தது!

பிரியாமான ஹதீதும்,

ப்ரிய நபி வாக்கும்!

ப்ரியா விடை அல்லவே!

ப்ரியாமாய் மீள்வாய்!

முழு அங்க சுத்தியாய்!

முழுமையாய் எம்மிலே!

முழு சுக வாழ்வாய்!

மீண்டும் முழுமையாய்!

மீள்வாய்!

அர்ஹமர் ராஹிமீனே!

ஆஃபியத்துடனே!

அதிக அமல் செய்திடவே!

ஆயுளை நீளமாக்கியே!

அருள்புரிவாய் ரஹ்மானே!

அகநூலாய் முகநூலை

அகத்திலுள்ளதையே!

அகிலத்தில் காணும்,

அக முகநூல் ப்ரிய நேச

அன்பர்களுக்கும்!

வாட்ஸ் அப் குழுமத்தில்

வாகாய் பயணிக்கும்!

வாஞ்சை ஹபீபின் ப்ரிய

வ்ள்ளலின் நேச நெஞ்சம்!

வைத்த நேசர்களுக்கும்!

எமக்கும்,சந்ததியினர்

உடன்பிறப்பு,உண்மை

உற்றபிரியர்களுக்கும்!

உகப்பாய் தருவாய்.

ஹஜ்ஜின் பாக்யமும்!

ரமழான் உம்ரா பாக்யமும்!

ஆரோக்ய வாழ்வுடனே!

அதிக அமல் செய்திடவே!

ஆட்செல்வமும் பொருட்செல்வமும்!

அள்ளி அள்ளி தருவாய்!

உன்னிலிருந்து கஜானா

உரிமையோடு தருவாய்!

உகப்பாய் நிறைப்பாய்!

உன்னத கல்பாய் ஆள்வாய்!

ஆக்குவாய்!

அறிவும் ஞாபக சக்தியுடனே!

ஆற்றலும் அழகும்

அன்புடனே!

அஹ்மதர் ஒளிவால்

அனுபவிக்க செய்வாய்!

                நாரே  தக்பீர்..

            அல்லாஹ் அக்பர்.

              நாரே  ரிசாலத்..

            யா ரசூலல்லாஹ்..

அஹ்மதரின் ஸலவாத்

          துதித்து நாவினில்

                நனைவோம்!

                     آمــين.آَمِيـٍـِنْ آَمِيـٍـِنْ  

                     يَآ رَبَّ آلٌعَآ لَمِِيِنْ  !🌹

                    يارحمة اللعالمين !🌹

                 🤲🤲🤲🤲🤲

                   💞 يامُحَمَّدٍ 💞

🖋நூர்ஷஃபியா காதிரியா


No comments: