Tuesday, July 13, 2021

இறைசிந்தனை நட்பின் புனிதம்!

 Noor Saffiya


இறைசிந்தனை

      நட்பின் புனிதம்!

துல்ஹஜ் முதல் 🔟

கல்ப் சேர்வதாலே!

துய்யோன் நெருக்கம்

உண்டாகிறதே!

தூய கல்பாக்க தூதர்

வழி நாடுகிறதே!

துய்யவன் வகுத்த

நியதி சேர்வதாலே!

துங்கமான இதயம்

தங்கமாய் ஜொலித்து

துலங்குகிறதே!

தூங்கும் விழி, விழிப்பு

நிலையில் சேர்வதாலே!

தங்கும் விடுதி இறுதியில்

ஜென்னா காணுகிறதே!

தரணியில் தந்ததோடு

அங்கம் சேர்வதாலே!

தகையோனை பார்க்கும்

தரஜா கூடுகிறதே!

துளிகள் சேர்வதாலே

வெள்ளம் ஆகிறதே!

தூசி கல்பில் படிந்தாலே

துன்பம் தஞ்சமாகிறதே!

துவளாது தூதரானாலே

துன்யா வளமாகிறதே!

துய்யோனில் துயிலானாலே!

தீயது அணுகாது

தூதர் ஒளி காணுதே!

உளிகள் சேர்வதாலே

உன்னத சிற்பமாகிறதே!

உன்னத நட்பு சேர்வதாலே!

உலகம் உன்னில் உன்னத

உறவாக உரையாடுதே!

விழிகள் இமையோடு இதமாய் சேர்வதாலே!

வாசியில் வீசும் அழகு தென்றலாய் நேசமாகிறதே!

விசுவாசமான கல்ப்

வள்ளலில் சேர்வதாலே!

வசிக்கும் இல்லமும்

மன நிம்மதியாகிறதே!

மொழிகள் சேர்வதாலே

வனப்பு ஆகிறதே!

மறை மொழி,ஹதீஸ் பேசுகையிலே முறையான

பசுமை பாதையாகிறதே!

வழிகள் ஒன்று சேர்ந்தாலே!

வாழ்க்கை பாதையாகிறதே!

வழிகாட்டும் நல்ல நட்பு

நேர்வழி பாதை மட்டுமே!

நவின்று நகர்த்துகிறதே!

எளிமைகள் எல்லாம்

ஏகமாய் சேர்வதாலே!

ஏற்றமாய் பணிவோடு

ஏணியாய் உயர்த்துகிறதே!

எளியோனின் துஆ மகிமை

ஏந்தும் கரம் சேர்வதாலே!

தாமதில்லாமலே உடனே தகையோனின் கிருபை தரணியில் மக்பூலாகிறதே!

ஒளிகள் ஒன்றுடன்

ஒன்றாய் சேர்வதாலே!

ஓர் காட்சி உதயமாகிறதே!

ஒருவனின் சொல் ஏற்றால்!

ஓர் புனித உலகமே உன்னில்

ஒன்றாய் ஆள்வது தெரிகிறதே!

களிப்பு பெற்ற மனம்

சேர்வதாலே!

கவிதை பிறப்பாக்கிறதே!

கள்ளம் கபடமில்லா

கருணை உள்ளமானாலே!

காப்பவனும் கண்மணியும்

காக்கும் கேடயமாகிறதே!

விழிகள்  மூட,  இமைகள்

கலந்து சேர்வதாலே!

வர்ணனையாகிறதே!

விழி மூட ஒளி சேர்வதாலே!

வாஞ்சை ஹபீபின் ஒளி

நிழலும்,நிஜமுமாகிறதே!

அங்கம் ஸுஜுதில்

அவனோடு சேர்வதாலே!

அனைத்து நன்மை

தேவை நிறைவேறுகிறதே!

அவனோடு சங்கமமும்!

அஹ்மதர் நேரலையகிறதே!

ஒளி ஒலியோடு சேர்வதாலே!

ஒருவனில் நிலையாகிறதே!

ஒலிக்கும் திக்ரே கல்பானது!

ஓங்கி ஒலிக்குதே கேட்குதே! ஒளிரும் ஜென்னாவிலுமே!

இரவு இரசுலோடு

இனியதாய் சேர்வதாலே!

இதய ஒளி ஜோதியில்

இணைக்கிறதே!

இருட்டும் 🌟 மின்னொளி

சேர்வதாலே!

இதய கமலம் துதிபாடி

இறையில் கமழ்கிறதே!

நாவும் திக்ரும் ஒன்றாய்

நறுமணமும் சேர்வதாலே!

நாயனும் ரூஹும்

நாதமாகிறதே!

நாதமும் நாத அங்கமுமே

நாதராக்கி மகிழ்கிறதே!

எத்தனை அம்சங்கள்

எல்லாம் சேர்வதாலே!

எத்தனை விந்தைகள்

எழிலழகாய் நிகழ்கிறதே!

அத்தனை வகைகளும்

அழகுபட اللهவும், رسولலுமாய்,

ஆற்றல் படைக்கிறதே!

சுபுஹானல்லாஹ்!

சாட்சியாளன் தந்த

சங்கை நாள் பொருட்டால்!

சகல பாக்யமு பெற்று!

சந்தோஷமாய் ஆள்வோம்!

செல்வச் செழிப்பும்!

சீதேவி தனமும்!

சீரான வாழ்க்கைக்கே!

சீர் செய்யும் கல்பும்!

நேராய் வாழ நபிவழியும்!

நீதமாய் வாழ வாய்மையும்! நாயன் வகுத்த வழியும்!

நலமாய் வாழ நல்லதோர்!

நன்மை தரும் நட்பும்!

நாயனே தந்தருள்வாய்!

நீதனே தேடும் யாவுமே!

நன்மையாய் அமைத்திடுவாய்!

தீய சொல்,செயல் தடுக்கும்!

தீயவர் நெருங்காது காக்கும்!

தீதாராய்  கேடயமாவாய்!

      அஹ்மதரின் ஸலவாத்

          துதித்து நாவினில்

                நனைவோம்!

                     آمــين.آَمِيـٍـِنْ آَمِيـٍـِنْ  

                     يَآ رَبَّ آلٌعَآ لَمِِيِنْ  !🌹

                    يارحمة اللعالمين !🌹

                 🤲🤲🤲🤲🤲

                   💞 يامُحَمَّدٍ 💞

🖋நூர்ஷஃபியா காதிரியா


No comments: