Saturday, July 31, 2021

மங்கல முழக்கமே! மலரே 🌹 மலர்ந்தாய்

 


Noor Saffiya

   மங்கல முழக்கமே!

மலரே 🌹 மலர்ந்தாய்!

மங்கல நிகழ்வாய்! எம்

மனையினிலே; யா ரப்பே!

மேளம் எனும் தப்ஸ் ஓசை!

முழங்க வைக்க வந்தாய்!

மேலோனே துல் ஹஜ் 🌙 யிலே!

மேன்மை மக்கள் கூடியே!

முன்னோனே; மகிழ்ந்தனரே!

மனமும் ஒன்றிணைந்தே!

மஜ்லிஸில் ஆலிமுடனே!

மிளிர்ந்த அனைவருமே!

மருகி கையேந்தினரே!

நெஞ்சம் உன்னில் தஞ்சமே!

கெஞ்சும் கல்பும் உன்னிலே!

மிஞ்சும் அளவு நிஃமத்தே!

கொஞ்சமும் குறைவிலாமலே!

நிறைந்து கேட்டனரே!

நிலைத்த வாழ்வுமே!

நீடூழி ஆயுளுடனே!

நிம்மதியாய் வாழ்ந்திடவே!

சொந்தமும் கூடி மகிழ!

பந்தங்கள் பகிர்ந்து திகழ!

சிந்து பாடி சிறுவர்கள் கூடி!

சிந்தை குளிர தந்தாயே!

மஹ்மூரதரின் மணமும்!

மன்னானின் அருளும்!

மனையில் இன்பமும்!

மாட்சிமை காட்சியானாய்!

வானத்தின் விண்மீன்

வசந்த காலமாக்கிடவே!

வருகை மலக்குகளோ!

வந்தனர் துல்ஹஜ் 🌙 யிலே!

வானவில் 🌈 போலவே!

வருடிய பேச்சினிலே!

வீடே எழிலழகாய் ஆனதே!

விரும்பியது நிறைந்ததே!

இதமாய் வெள்ளி நீரோடை

இதய சுத்திகரிப்பாய்!

இரு வீட்டார்கள் சலசலக்க

இல்லம் உறவு பாலமானதே!

இசை🎸 என்பதே சலவாத்தாய்!

இனிய வாழ்த்து மழையாய்!

இணைந்து கோகுலம் ஒளியாய்!

இமை விழி ஆனந்த நீராய்!

இறைரசூலோடு உறவாடியதே!

ஹுருலீன்களாய்; ஆள,

ஹக்கே அமைத்த  வாழ்வே!

ஹபீபின் ஆசி; மனையில்,

ஹுப்போடு சமைத்தான் ரப்!

எல்லா நற் சுப செய்தியுமே!

ஏகோன் அருட் கொடையே!

எடுத்து நல்லபடி நன்மையாய்!

எந்தவித இடையூறு வராமலே!

ஹலாலான முறையிலே!

ஹலாலான ஆடை அணிகலன்கள்

ஹலாலான அனைத்துமாய்!

ஹக்கே மாந்தர்கள் சூழும்!

மண இல்ல உள்ளமாய்

மேன்மை சஹாபாக்கள்

மலர் 🌹 தூவி வாழ்த்தும்

மங்கல மஜ்லிஸாய்!

மனநிறைவு தரும்  நிகழ்வாய்!

மலக்குகளின் சோஃபனம்

மனையின் பரிசுத்தமாய்!

மகிமையே அகபுற சுத்தியாய்!

எல்லா நற்காரியங்கள்

எந்நாளும் எக்காலமும்

இறையச்சம் குடிகொண்ட

இறைரசூல் கல்பாய்!

இருக்கின்ற உறவுகள்

இனிவரும் சந்ததிகள்

இறைவா நீயே நிலைத்து

இரசூலின் வாசம் நிறைத்தாய்!

அல்ஹம்துலில்லாஹ்!

என் சுவாசம் என்னிடமில்லை!

எல்லாம் நீயாகி நானாகி

எல்லாம் அங்கப்ரதிஷ்டமாய்

என் அங்கம் ஸுஜுதிலே!

இணையும் பாலத்திலே

இணைந்த புதுமையே!

இறைரசூல் காட்சியாய்

இதய தாயாய் நின்றாய்!

அன்பின் கோட்டையானாய்!

அரணின் காவலானாய்!

அனைத்து நிகழ்வுமே!

ஆனந்த அருள்மழையானாய்!

சுபுஹானல்லாஹ்!

இந்நாளினைபோலவே

இனிவரும் காலமெல்லாம்

இறையச்ச இனிய இல்லமாய்!

முழங்கும் திக்ரினிலே!

முஹம்மதின் மணத்திலே!

மலக்குகளின் வருகையிலே!

மாந்தர்கள் வாழ்த்தினிலே!

மங்கலம் மங்கலமாய்!

மனையும்,மனமுமுமே!

மன்னாருள் மழையிலே!

மஹ்மூத் ஆசியினிலே!

தீன் துன்யா ஆஹிரா வாழ்வு!

திவ்வியமாய் ஜொலித்து!

தீதாராய் ஆள,வாழ அனுபவித்து!

திருநபி குடும்பபெயர்

தித்திக்க ஆண்,பெண்,என

தரும் மக்கட்செல்வமும்!

அருட்,பொருட்செல்வமும்!

அள்ளி வழங்க பரக்கதும்!

அருள் நிறைவாக்குவாய்!

(மகனின் நிச்சய நிகழ்வு!

மனதினில் உதித்த பதிவு!

மேன்மை வரகவி காஸீம்!

மகிமையால் பெற்ற வரவு)

அனைவரும் மகன் ஹக்கில்!

அன்பினில் அஹ்மராக்கும்!

ஆற்றலில் அல்லாஹ்வின்

நினைவிலாக்கும்!

அழகும் அறிவும் பணிவாக்கும்!

இம்மை மறுமை கல்வியிலே!

இறுதிவரை ஈமானுறுதியிலே!

ஸாலிஹான மக்களுடனே!

இல்வாழ்க்கை செழிக்க

இஷ்கோடு துஆ செய்ங்க!

        🌹ஆஷிகே ரஸுல்🌹

                சீதேவிகளா!

       அஹ்மதரின் ஸலவாத்

          துதித்து நாவினில்

                நனைவோம்!

                           آمــين.آَمِيـٍـِنْ آَمِيـٍـِنْ  

                           يَآ رَبَّ آلٌعَآ لَمِِيِنْ  !🌹

                          يارحمة اللعالمين !🌹

                  🤲🤲🤲🤲🤲   

                         💞 يامُحَمَّدٍ 💞

🖋நூர்ஷஃபியா காதிரியா

No comments: