Monday, July 19, 2021

துல் ஹஜ் 🌙 யினிலே! தூய கல்பாக்கிடவே!

 Noor Saffiya



💞இறைசிந்தனை

துல் ஹஜ் 🌙 யினிலே!

தூய கல்பாக்கிடவே!

தித்திக்கும் தல்பியாவே!

மேகம் துகிலுரித்தே!

மனை குளிர்ந்திடவே!

மழை பொழிய வைக்குதே!

மன்னான் அருட்கொடையே!

மேனி அழுக்கு விலகியதே!

மிளிர்ந்த ஒளி சுடரானதே!

மண்ணில் மகுடமானதே!

மின்னலென பளிச் கல்பானதே!

மோகத்தில் துயில் கொண்டதே!

மோன ஞானக்கலை ஆனதே!

மானசீகமாய் மஹ்மூதரே!

மறையின் மாண்பு பெற்றதே!

ஓடி ஒழிகிறதே; சுவாச

கலை அழகிலே!

ஒருவனில் நின்று உள்

மூச்சு திக்ராய்!

ஒயாது முழங்குகியதே

ஓங்கார மந்திரமே!

ஒற்றை வார்த்தையாய்!

லாயிலாஹ இல்லல்லாஹு

ஒடுங்கும் வரையிலுமே

முஹம்மதுர் ரசூலல்லாஹ்வென!

வேக முனைப்பினிலே!

வாகாய் மொழியுதே!

வானின் உயரத்திலே!

வள்ளல் பேருடனே!

பாங்கின் ஓசையுமே!

ஒளியும் எழுகுதே உன்னத நேரத்திலே!

ஒவ்வொரு இல்லமுமே!

ஒளி விளக்காய் மின்னுதே!

ஒருவனில் ஸஜதா செய்ய

தஹஜ்ஜத், சுபுஹினிலே!

தாகம் தீர்த்திடவே

தாஹ நபி நேசமே!

தருவான் ஹவ்ளுல் கவ்தர்

தந்து ரட்சிதருள்வானே!

தீர்ந்திடுமே நீரின் மகிமையே!

தந்த வஹியை நிலை

நிறுத்துபவர்க்கே!

நாடி துடிப்பினிலே; எம்மின்

நிலை அறிந்திட்டதே!

நிமிடம் தவறாது உயிர்

நிலை சிந்தித்ததே!

நாடியின் வகைகள் தான்

எத்தனை விந்தைகள்!

நாடிகள் அறிந்திடவே;

நாடியவர்க்கே தருகிறானே!

தொடர்ந்து இவ்வுலகு முடித்திடவே!

தொடராய் வாழ தந்த

தூய வழிகாட்டி குர்ஆனுமே!

தூதாய் நபி நேர்வழியுமே!

தொழுகை ஓர் அத்தாட்சியுமே!

தொடர்ந்து எம்மில்

நிலைக்கும் கருவியே!

துணிவாய் எதிலும் கலக்க; தொழுகை  நிலைத்ததே!

தூயவனில் நெருங்க

வைத்து மகிழுதே!

தொட்டதெல்லாமே!

துலங்கிடுமே துன்யா

ஆஹிராவிலுமே!

படர்ந்து வரிந்திட்டே!

பரிகாசிக்குமே மஹ்ஷரிலே!

பேசும் அங்கம் யாவுமே!

பாரினிலே பாவம்

போக்கியிருந்ததாலே!

பரிவு கொடுக்குமே!

பாரில் புலம்பிப் பணிந்து

பதை பதைத்து கெஞ்சிய இஸ்திஃஃபாராலே!

பரிந்துரைப்பார்களே

பாசநபி அல்லாஹ்விலே!

எழுதுவான் அல்லாஹ்வுமே!

ஏற்றமுள்ள ஜென்னாவென்றே!

தொழுவான் ஷுக்ராகவே!

துய்யவனினருகிலே!

தூதர் அரவணைப்பிலே!

ஏற்றமுடன் செல்வோம்!

ஏந்தலர் கரம்பிடித்தே!

எல்லாம் புகழும் துதியும்

எம்மான் ஒருவனுக்கே!

                          🌹الحمد لله شكرا لله🌹

      அஹ்மதரின் ஸலவாத்

          துதித்து நாவினில்

                நனைவோம்!

                       آمــين.آَمِيـٍـِنْ آَمِيـٍـِنْ  

                       يَآ رَبَّ آلٌعَآ لَمِِيِنْ   !🌹

                       يارحمة اللعالمين !🌹

                   🤲🤲🤲🤲🤲 

                       💞 يامُحَمَّدٍ 💞

🖋நூர்ஷஃபியா காதிரியா


No comments: