Tuesday, November 28, 2017

இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்

இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்
இழந்தது எவை என இறைவன் கேட்டான்

பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்

பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்🦀

கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்🦀


கோலம் மாறி அழகையும் இழந்தேன்🦀

வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்🦀

🦀🦀எதை என்று சொல்வேன் நான்🦀

🦀🦀இறைவன் கேட்கையில்🦀

🦀🦀எதையெல்லாம் இழந்தேனோ 🦀

🦀🦀அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்🦀

🦀🦀அழகாகச் சிரித்தான் இறைவன்🦀

🦀🦀கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்🦀

🦀🦀உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்🦀

🦀"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"🦀

🦀🦀"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"🦀

🦀🦀சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல🦀

🦀🦀தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்🦀

🦀திகைத்தேன் 🦀

🦀🦀இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்🦀

🦀🦀வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்🦀

🦀🦀இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்🦀

🦀🦀இறைவன் மறைந்தான்..
 படித்ததில் பிடித்தது🦀
http://www.pasumaikudil.com
http://boomiervadi.blogspot.in/
www.respoviews.com › 

No comments: