Monday, November 13, 2017

தமிழின் பக்தி இலக்கியங்களை ஆய்ந்தவர்கள்

தமிழின்
பக்தி இலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு பக்தி மொழி
என்கிறார்கள்

புறநாநூறு போன்ற
போரிலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு வீர மொழி
என்கிறார்கள்



அகநாநூறு காமத்துப்பால்
போன்ற
காதல் இலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு காதல் மொழி
என்கிறார்கள்

வள்ளுவம் தரும்
அறிவியல் தடங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு அறிவியல் மொழி
என்கிறார்கள்

குறள்வழி அறம் கண்டு
பிரமித்தவர்கள்
தமிழ் ஒரு அற மொழி
என்கிறார்கள்

இப்படியாய்
வாழ்க்கையின்
அத்தனையையும் கொண்ட
தமிழை
அவரவர் கண்கள் போல்
கண்டு
போற்றிப் புகழ்கிறார்கள்

குருடர்களும் யானையும்
கதைதான்
என் நினைவில் வருகிறது

தமிழ்
ஒரு முழுமை மொழி
தமிழில் இல்லாதது
தரணியில் இல்லை
அதைத்
தமிழன் அறியாததுதான்
தமிழுக்குத் தொல்லை

அன்புடன் புகாரி

No comments: