வெளிச்சத்தைவிட
இருளே
எனக்கு விருப்பம்.
விதை வளர்கிறது
மண்ணறை இருட்டில்.
குழந்தை வளர்கிறது
கருவறை இருட்டில்.
ஆக்கங்கள் யாவும்
அழகான இருளில்தான்.
வெளிச்ச முத்தத்திலோ
விளம்பர முத்தத்திலோ உண்டா
இருட்டு முத்தத்தின் இன்பம்?
மோதல் தளர்வதும்
காதல் வளர்வதும்
இருட்டில்தான்.
கருவறையிலும்
கல்லறையிலும்
கூடவே இருப்பது
இருட்டுதான்.
வெளிச்சங்கள் யாவும்
வந்து போகலாம்
இருட்டின் நட்பு
நிரந்தரமானது.
வெளிச்ச வண்ணங்கள்
பூசிக்கொள்ளாத
இருட்டை நம்பலாம்
எந்த நாளும்.’
Nagore Rumi

No comments:
Post a Comment