Sunday, April 12, 2015

கணவனை உயிராய் பேணுங்கடி..!(எனக்கு பிடித்த என் கவிதை )


கணவனை உயரென்னுங்கடி -அவன்
காதலை நாளுமே போற்றுங்கடி !
குணத்தினில் வாசுகி ஆகுங்கடி-நல்ல
குங்குமம் நெற்றியில் பூசுங்கடி!

அன்பினால் கணவனை ஆளுங்கடி-தினம்
ஆனந்த வெள்ளத்தில் முழ்குங்கடி!
துன்பத்தை வாழ்க்கையில் போக்குங்கடி-நல்ல
தூய்மையை நாளுமே !ஆக்குங்கடி!

கற்பினைக் கண்ணெனப் பேணுங்கடி-நல்ல
கருணையை நெஞ்சிலே பூணு ங்கடி!
அற்புதக் குழந்தைகளை ஈனுங்கடி-அவர்களை
அருமையாய் வளரத்தின்பம் காணுங்கடி!

இல்லத்தை சொர்க்கமாய் மாற்றுங்கடி-அங்கு
இணையில்லா இன்பத்தை ஊற்று ங்கடி!
வெல்லத்தைப் போலன்பாய் பேசுங்கடி-என்றும் !
வீணான கொள்கையை வீசுங்கடி!

அரைகுறை ஆடைகளைத் தள்ளுங்கடி-நம்ம
அழகான பண்பாட்டைக் கொள்ளுங்கடி!
கரையில்லா இன்பத்தைக் காணுங்கடி-என்றும்
கணவனை உயிராய் பேணுங்கடி..!
 Kalaimahel Hidaya Risvi

3 comments:

Thenammai Lakshmanan said...

அருமை அருமை கலைமகள் சகோதரி.. மிக அருமை.. !!!!

punithavella said...

தங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பிடிந்த மிக அருமையான கவிதை. வாழ்த்துக்கள் அக்கா...

punithavella said...

தங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பிடிந்த மிக அருமையான கவிதை. வாழ்த்துக்கள் அக்கா...