Friday, April 24, 2015

குழந்தைப்பாடல் - 2 மதுவும் புகையும் வேண்டாமே

வேண்டாம் அப்பா விட்டுவிடு
வீதியில் நம்மை விட்டுவிடும்
மதுவும் புகையும் மறந்துவிடு
மகிழ்ச்சியை நாளும் தந்துவிடு
மூளை செயலை இழந்திடுமே
முன்னோர் பெருமை குலைத்திடுமே
ஊரும் உன்னைத் தூற்றிடுமே
உறவுகள் யாவும் விலகிடுமே
உடலும் நாளும் நலிந்திடுமே

வேண்டாம் அப்பா விட்டுவிடு
மதுவும் புகையும் மறந்துவிடு

பெரிய பெரிய படிப்பெல்லாம்
நானும் படிக்க விரும்புகிறேன்
உடலை நீயும் காத்தால்தான்
உழைத்து ஊதியம் பெற்றிடுவாய்
உன் பிள்ளையென்னை உயர்த்திடுவாய்!

வேண்டாம் அப்பா விட்டுவிடு
வீதியில் நம்மை விட்டுவிடும்
மதுவும் புகையும் மறந்துவிடு
மகிழ்ச்சியை நாளும் தந்துவிடு
--- புதுசுரபி

No comments: