Friday, February 28, 2014

சொல்லுவதோ உலகுக்கு செய்வதோ உனக்கு

வெளிப்டையாக சொல்லவில்லை
வெளிப்டையாக சொன்னால் விலகி விடுவாய்

சொல்லாமல் விட்டால் அறியாமல் போவாய்
சொல்லியும் விட்டால் கெட்டொழிவாய்

சொல்லுவதோ உலகுக்கு
செய்வதோ உனக்கு


உன் செயல் உனை உயர்த்த
உனை உயர்த்தியதோ ஊரார்

உயர்த்தியவரை மறந்தாய்
மறந்தவர் மறக்க மாட்டார்

உயர ஏற உதவும் ஏணி
உடைந்து விட
விழுந்து மாய்வாய்


 "சொல்லிச் செய்வார் சிறியோர்
சொல்லாமற் செய்வார் பெரியோர்
சொல்லியும் செய்யார் கசடர். "

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாகச் சொன்னீர்கள்...