Tuesday, February 4, 2014

உனை இறைஞ்சுவதற்கே உயிர் பெற்றேன் !

இறைவா !
இக்கரையில் விட்டாய்
அக்கரையில் சேர்த்து விடு
அக்கறையோடு கேட்கிறேன்
நட்டாற்றில் நிறுத்தி விடாதே
காக்க வைத்து கரையை கடக்கச் செய்யாதே
மின்னல் வேகத்தில் உன் உறையில் சேர்த்து விடு



அகிலமெல்லாம் ஆட்சி செய்யும் ஆண்டவா !
உலகமெல்லாம் தேடி பொருள் பெற்றாலும்
உனதருள் நாடி பெறுவதில் பேரருள் பெற்றவனாவேன்

உனதருள் நாடி தொழுது நிற்கின்றேன்
உனையல்லால் யாரை நான் நாடுவேன்

உனதருள் தந்து
எனை உயர்வாக்கி
எனை உன்னிடத்தில்
அழைத்து உயர்வாக்கு
ஒரு முழம் நாடி வர
ஒரு பாகம் நெருங்குபவன் நீ
உனை இறைஞ்சுவதற்கே 
உயிர் பெற்றேன்.

No comments: