Thursday, February 20, 2014

என்றாள், என்றேன்..!! இப்படியாக தொடர்ந்தது ....! தொய்வில்லாமல் தொடர்கிறது

கனவு என்பது ஏக்கங்களின் கானல்நீர் என்றாள்,
கனவு என்பது சாத்தியங்களின் முன்னோட்டம் என்றேன்..!!

கடந்த காலம் என்பது நிகழ்காலத்தின் எச்சம் என்றாள்,
அவை வருங்காலத்தின் அடியுரம் என்றேன்..!!

செல்வம் பெருக்குதல்தான் வாழ்க்கையில் வெற்றியா என்றாள்,
வறுமையை வெல்வது மட்டுமே வாழ்க்கையாகாது என்றேன்..!!

கலாச்சாரம் என்பது மூடிய இதயங்களின் பிடிவாதம் என்றாள்,
பிடிவாதம் என்பது தோல்வியுற்ற சித்தாந்தங்களின் முட்டுக்கொடுப்பு என்றேன்..!!

என்றாள், என்றேன்..!! இப்படியாக தொடர்ந்தது ....!இங்கு  சொடுக்குங்கள்


-நிஷா மன்சூர்
Nisha Mansur

1 comment:

நிஷா மன்சூர் said...

மிகுந்த மகிழ்ச்சி கவிஞர் மலிக்கா ஃபாரூக் அவர்களே,

என்றதும் என்றதும் என்றென்றும் தொடரட்டும்,
அவை புரிதலின் சுவையை அனைவர்க்கும் உணர்த்தட்டும்..!!