ஒயாமல் ஒடும் மேகம்; தாகமாய் தலை உயர்த்தி நாம் பார்க்கும் வானம்! எல்லைத் தெரியாக் கொள்ளைப் போகும் அழகு; ஒடிவிளையாடும் குழந்தைக்குப் பூச்சாண்டியாகப் பாதம் பிடிக்கப் பாய்ந்துச் செல்லும் கடல்!
வாடிய முகத்திற்குப் புன்னகையாய்; தோகை மூடிய இரவிற்கு மின்னும் நட்சத்திரங்கள்!
ஒளித் தரும்; அதனால் வழித்தரும்; எரிந்துக் கொண்டே விளக்கை எரியவிடும் சூரியன்!
தன்னாலே உருவாகத் தனக்கென்றும் தெரியாதே; சொன்னாலும் புரியாதச் சுய அறிவும் கிடையாதே; மறைத் தந்த விதிமுறைகள் கதியே எனக் கடமையாற்றுதே!
விக்கித்துத் திணறும் உனக்கோ இது விடுகதையே; சிந்தித்து உணர்ந்தால் அது உனக்கு முதல் விதையே!
இல்லாதக் கதவிற்குச் சாவி நீ தேடுகிறாய்; பூட்டாதக் கதவாய்; மார்க்கம் உனக்கு இருக்கிறது; வாராமல் இருப்பதற்கு எது உனைத் தடுக்கிறது!
No comments:
Post a Comment