Friday, February 28, 2014

பட்டுத் தெறிக்கும் பார்வையில்..

பட்டுத் தெறிக்கும் பார்வையில்
மேகத்தின் அழகும்
இதயங்களின் ஆசையும்
நகர்ந்து செல்லும் போது
பசுமை நிறைந்த காட்சிகள் மனதில் தோன்றும் ...!

வானில் சுடர் கொடுக்கின்ற
சூரியன் மேனியில்
தடவும் போது
வியர்வையாய் வடிந்து
விழும் சில எண்ணத் துளிகள் …

ஒரு கணம் எதிர் பார்ப்பு
ஏங்கித தவிக்கும் பொழுதில்
முன்பு நிறைவேறத் தவறி விட்ட
வேதனைகளும்
சுமைகளும் தொடரும்
வாழ்க்கைப் பயணங்களில் …



ஆனாலும்
விதியை வரைந்து செல்லும்
வாழ்வின் ஓவியம் …!

கோடையில் விழுந்த
இடியைப் போல்
அதிர்ச்சியூட்டும்
உள்ளத்து உணர்வுகளில்
மின்னல் தாக்கங்கள் ….!

வாழ்க்கையிலே
இத்தனை கீறல்கள்யென்றால்
சுவாசம்
எப்படி மூச்சு விடும்..?
மூச்சு
எப்படி சுவாசம் விடும்..?

காற்றும்
இதயத்தில் தூசுகளாய் தேங்கியிருக்கும்

உள்ளத்து உணர்வுகளில்
நாடி நரம்புகளில்
ஓடிக் கொண்டிருக்கின்ற
குருதித் துளிகளின்
வேதனை வலிகள் எனை

உறுஞ்சி உறுஞ்சி
விழுங்கி விழுங்கி
தாயின் தொப்புள் கொடி
உறவை நாடி நாடி
தேடி தேடி
தினமும் தவமிருக்கின்றன ….

அவர்கள்
என்னை அரவணைக்க
வரவே மாட்டார்கள் என்ற
எதிர்பார்க்காத
நினைவுகளுடனும்
நிகழ்காலங்களுடனும் ...!

அவர்கள்
அவர்கள் நாடிய உறவுடன்
அவர்கள் விரும்பிய உறவினர்களுடன்...!

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
 Kalaimahel Hidaya Risvi
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் கலைமகள் ஹிதாயா றி...
இங்கு சொடுக்கி பாருங்கள் கலையுலகில் கலைமகள்.....ஹிதாயா றிஸ்வி.

ஹிதாயா றிஸ்வி. blogs

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

கலைமகள் ஹிதாயா றிஸ்வி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

அவர்களின் தளங்கள் இணைப்புகளுக்கு நன்றி...