Wednesday, February 5, 2014

இயல்பாய் இசை மீது உன்னிடமிருக்கும் காதலால்

வானவில்லாய் உன் புருவங்கள் கொடை பிடிக்க
நீல நிற மீன் களின் கரு விழிகளாய்
உன் விழிகளின் பார்வை பல இடம் சென்று வர

மென்மையான தென்றலை உள்வாங்கி
சூட்டோடு வெளியாகும் காற்றினால்
உன் நாசி சூடாகியதால் சிகப்ப வண்ணமாய் காட்சியளிகின்றது

ரோஜா மலரின் இதழ்கள் விரிவதுபோல்
விரியும் உன் வாய் இதழ்கள்
முத்துச் சிதருவதுபோல் வார்த்தைகளை உதிர்கின்றன
உதிரும் சொற்கள கோர்வையாய் கவிதையை தருவதால்
ஆப்பிள் நிற மென்மையான தாமரை கண்ணங்கள்
சிகப்பு ரோஜா வண்ணமாய் மாறுகின்றன உவகையால்
வார்தைகள் கவிதையாய் வந்தமையால் வாயசைத்து
ஓசை எழுப்பி பாடல்களைப் பாட

வெண்டைக்காயை ஒத்த மென்மையான் விரல்கள்
வீணையைத் தேடாமல்
வாழைத்தண்டு ஒத்த உன்
தொடை மீது தாளம் போடுகிறது
இயல்பாய் இசை மீது உன்னிடமிருக்கும் காதலால்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மலர்கள் , காய்கறிகள் என் ஒப்பீடு...! ரசித்தேன்...

வாழ்த்துக்கள் ஐயா...