Friday, October 11, 2013

அம்மா


ஒத்தச் சொல்லில்
உனை அழைத்தாலும்;
மொத்தச் சொல்லும்
பத்தாதம்மா;
பொத்தி வைத்து
அடைக்காத்து;
எனை உன்
பத்துவிரலுக்குள்
கட்டி வைத்தாயம்மா!

முள் குத்தி;
நான் முனகும் முன்னே;
முந்திக்கொண்டு நீ
அழுவாயம்மா;
பள்ளி முடிந்து
படியேறுமுன்னே;
பாய்ந்து எனை
அணைப்பாயம்மா!

வம்பு இழுத்து
வாசலில் நின்றாலும்;
கொம்புடன் வந்து
என் தலைக்கோதும்
உன் அன்பு;
புரியாமல் உனைப்
பிரியாமல்;
பிதிங்கி நிற்பேனம்மா!

அழுக்கு ஆடையுடன்
எனக்காக நீ
சமைக்கும் போதும்;
மணக்கும் உன் அன்பிற்காக;
முந்தாணையில்
முகம் பொதிப்பேனம்மா!

 

நன்றி : http://itzyasa.blogspot.in/

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

கலங்க வைக்கும் வரிகள்...