Wednesday, January 6, 2021

அல்லாமா இக்பாலின் இந்த அருமையான துஆ

 


அல்லாமா இக்பாலின் இந்த அருமையான துஆ கவிதையின் என் உத்தேசமான தமிழாக்கம்:

===================================

ஏற்றம் கொடு இறைவா, இறக்கம் தடு

கொஞ்சமேனும் என்னை சாதிக்க விடு

உன் பாதையிலே என்னை நீ தூக்கி வை

காலத்தை எனக்கு சான்றாக ஆக்கிவை

உன் கருணை என்னை நோக்கி இறங்கி வந்தது

என் முயற்சிகளுக்கான பரிசு தந்தது

உலகாயத ஆசைகள் இல்லை எனக்கு

விதிக்கப்பட்ட உணவு போதும், இல்லை வழக்கு

என் மனம்மெல்லாம் உன் சிந்தனைதான்

என் மூச்செல்லாம் உன் வந்தனைதான்

இறையச்சமே எனக்கான வெற்றியாக ஆகும்

மற்ற அச்சங்கள் யாவும் இதயத்திலிருந்து நீங்கிப் போகும்

உன் வாசலுக்கு வந்துவிட்டேன் நான் இறைவா

அல்லும் பகலும் இதுதான் என் துஆ

அன்பாளன் நீ, அருளாளன் நீ

கஷ்டங்களிலிருந்து என்னை தூரமாக்கு நீ

தீர்வுகள் ஏதுமில்லை பிரார்த்தனையைத் தவிர

கேட்பவர் யாருமில்லை, ஆண்டவனைத் தவிர

நாகூர் ரூமி



No comments: