Thursday, January 14, 2021

கலைஞரின் பொங்கல் கவிதை

 

தமிழர்களே, தமிழர்களே!

 

மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல் என்றாரே!

 

பாவேந்தர் பாரதிதாசன் - அன்று

 

மூவேந்தர் பரம்பரை கொண்டாடிய

 

பொங்கலை என்றும்

 

தொடருகின்ற தமிழர் விழாவாகக் கொண்டாடுவோம்!

 

வான் முட்ட வண்ணக் கொடிகள் பறக்கட்டும்!

 

வாழ்த்துக்கள் முரசு கொட்டட்டும் வகை வகையாக!

 

தெருவெல்லாம் தோரணங்கள் -

 

திண்ணைகளில் கோலங்கள் -

 

தேன் கலந்த மழலை மொழியும்

 

ஊன் கலந்து உயிரோடு இணையும்

 

கோலமங்கைக்கு குளிர் விழியும்

 

 

காலமெல்லாம் வாழ்க தமிழ் என்று

 

சீலமிகு செம்மொழியைப் பாடட்டும்!

 

ஓலிமிடு கடல் போல் உலகெங்கும் பரவட்டும் தமிழர் புகழ்!

No comments: