Wednesday, May 8, 2019

உச்சி முகர்ந்து முத்தமிட்டு கொண்டாடுவதைத் தவிர வேறென்ன செய்யத் தெரியும்


ரமலான் மாதம் வந்ததும் அநிஷா மன்சூர்ஸ்ஃபியா செல்லக்குட்டிக்கு தொழுகையின் மீது ஆர்வம் வந்துவிட்டது.நேற்றும் இன்றும் தான் தொழுததை எழுதிவைத்து நான் வீட்டுக்குள் நுழைந்ததும் எடுத்துக் காட்டினாள். அழகான மழலைக் கையெழுத்தில் எண்ணிக்கை எழுதி டிக் செய்யப் பட்டிருந்தது. இன்று 16 ரக்அத் வரை தொழுதுவிட்டு நாளைக்கு 20 ரக்அத் தொழுதுடுவேன் என்று உற்சாகமாக சொன்ன குழந்தையை உச்சி முகர்ந்து முத்தமிட்டு கொண்டாடுவதைத் தவிர வேறென்ன செய்யத் தெரியும் இந்த எளிய தகப்பனுக்கு....













நிஷா மன்சூர்

No comments: