Monday, May 13, 2019

*"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?*

*"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?*

*அரசனும், ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!!*

*"இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்?*

*இருப்பவன், ஈய வேண்டும் என இயம்பிட!!*

*"உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்?*

*உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!!*

*"எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?*

*எதையும், ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!!*


*"ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?*

*அதற்கு நான் ( ஐ ) என்ற அகம்பாவம் இருந்தால் தனிமை படுத்தப்படுவாய் என்பதனை உணர்த்த!*

*"ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்?*

*ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட!!!*

*எனவே நான் ( ஐ ) தான் என்கிற குணம், ஒரு மனிதனை தனிமைப்படுத்தி, ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளி விடும்.*

No comments: