Friday, May 31, 2019

மண்டியிடுதல் மறையை தந்த மான்புடையோனுக்கே

மண்டியிடுதல் மறையை தந்த மான்புடையோனுக்கே
மண்டியிட்டு வேண்டல் மறையை தந்த ஒருவனுக்கே

அறிதலில் எளிமை
புரிதலில் உயர்வு
புகழ் பாடுதலில் புண்ணியம்
புவியாளும் இறையோனுக்கே
புகழ் பாடுதலில் புண்ணியம் கிடைக்கும்
புவியாளும் இறையோனைப் புகழ்தளால்

ஆனந்தமாய் நிறைந்த மனம் அல்லாஹ்வை போற்றி நின்றது
அடுத்து நின்ற நபிமார்கள் வழிகாட்டல் சிறப்பானது
வகை வகையாய் வாழ்வின் சிறப்பு உயர்வானது
நிறை நிறையாய் நிறைவாக நித்தம் இறையோனை தொழுது நின்றேன்
ஆனந்தம் பேரானந்தமாய் பொங்கி நிறைவானது
அனைத்தும் புகழும் அல்லாஹ்வுக்கே (இறையோனுக்கே) சொந்தமானது


பிரார்த்தனை மற்றும் உபதேசம் பெற்ற நாட்கள்
மனதில் மகிழ்ச்சிகரமான நாட்கள்
மனதில் உட்புகுந்து ஆத்மாவை தொட்ட நாட்கள்
புனித சடங்கில் ஈடுபட்டு இணைந்த நாட்கள்
உண்மையான ஒரு வித்தியாசமான உயர்ந்த நாட்கள்


No comments: