Thursday, June 8, 2017

முளைவிடும் விதையின் புத்தம்புது வேரினைப்போல ..

முளைவிடும் விதையின்
புத்தம்புது வேரினைப்போல
பாலையில் திரியும்
உடல்வற்றிய பூனையைப்போல
கரையில் எறியப்பட்ட
சின்னஞ்சிறு மீனினைப்போல
உச்சிச் சூரியன் முகம்துடைத்த
வரண்ட காற்றினைப்போல


தண்ணீரைத் தேடும்
தாக நாக்குகள்
மௌனமாய் அடங்கித்
துயிலவும் செய்கின்றன
இறைவனின் பெயரை
இதய உதடுகளில்
ஈரமாய் நனைத்துக்கொண்டு

பின்
திறப்புநேர அழைப்பில்
புலன்களெல்லாம் ஒன்றுகூடி
நாவடியில் நெருப்பாய் நின்று
நீராடி நிறைகின்றன
நோன்பு நாட்களில்
* * 18 அன்புடன் இஸ்லாம்* * * * 

அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

No comments: