Sunday, June 18, 2017

ஆட்சியாளனை புகழும் இந்த வரிகள் எப்போதுமே என்னை நெகிழ வைக்கும் ! / Abu Haashima


எப்பொழுதும் நான்
உருகுவது 
அவனை எண்ணித்தான் .
எத்தனை முறை படித்தாலும்
அலுப்பே வராத என் ஆத்மாவின்
ஆட்சியாளனை புகழும் இந்த வரிகள் 
எப்போதுமே என்னை நெகிழ வைக்கும் !
*********
இறைவா...
யாவையும் 
பிறக்கவும் இறக்கவும் 
வைப்பவன் நீ !
பிறப்பே இல்லாத 
பேரதிசயமும் 
நீ !
பிரபஞ்சமெங்கும் 
பெருங்காற்றை 
புரள வைப்பவன் நீ !
அதில் 
துளிகூட கொடுக்காமல் 
மூச்சுக் காற்றை 
மூடி விடுபவனும் 
நீ !
காவியமும் 
ஓவியமும் 
எல்லாமும் 
எழுத வைத்து 
அறிய வைப்பவன் நீ !

எழுதுபவன் 
விதியை
எப்போதோ 
எழுதி வைத்தவனும் 
நீ !
இருப்பனுக்கும் 
இல்லாதவனுக்கும் 
தேடித் தேடிக் 
கொடுக்கின்ற 
கொற்றவன் நீ !
எவ்வளவு கொடுத்தாலும் 
தேவைகளே இல்லாத 
தயாளனும் நீ !
காதலிலும் 
காமத்திலும் 
செல்வத்திலும் 
சுக போகத்திலும் 
எம்மை
மூழ்க வைத்து 
உன்னை 
மறக்க வைப்பவன் நீ !
நன்றி மறந்தாலும் 
எம்மை மறவாமல் 
மன்னிப்பவனும் 
நீ !
எதையெல்லாமோ 
யாரையெல்லாமோ 
எழுதவைத்து 
ரசிப்பவன் நீ !
என்னதான் 
எமை மறந்து 
வாழ்ந்தாலும் 
உன்னையும் 
எழுத வைத்து 
ரட்சிப்பவனும் 
நீ !
இறைவா...
என் 
எண்ணத்திலும் 
என்
எழுத்தின் 
வண்ணத்திலும் 
எனை ஆளும் 
வல்லவன் நீ !
உன்னையே வணங்குகிறேன் 
உன்னிடமே உதவியும் தேடுகிறேன் 
எப்பொழுதும் நான்
உருகுவது 
அவனை எண்ணித்தான் .
எத்தனை முறை படித்தாலும்
அலுப்பே வராத என் ஆத்மாவின்
ஆட்சியாளனை புகழும் இந்த வரிகள் 
எப்போதுமே என்னை நெகிழ வைக்கும் !
*********
இறைவா...
யாவையும் 
பிறக்கவும் இறக்கவும் 
வைப்பவன் நீ !
பிறப்பே இல்லாத 
பேரதிசயமும் 
நீ !
பிரபஞ்சமெங்கும் 
பெருங்காற்றை 
புரள வைப்பவன் நீ !
அதில் 
துளிகூட கொடுக்காமல் 
மூச்சுக் காற்றை 
மூடி விடுபவனும் 
நீ !
காவியமும் 
ஓவியமும் 
எல்லாமும் 
எழுத வைத்து 
அறிய வைப்பவன் நீ !
எழுதுபவன் 
விதியை
எப்போதோ 
எழுதி வைத்தவனும் 
நீ !
இருப்பனுக்கும் 
இல்லாதவனுக்கும் 
தேடித் தேடிக் 
கொடுக்கின்ற 
கொற்றவன் நீ !
எவ்வளவு கொடுத்தாலும் 
தேவைகளே இல்லாத 
தயாளனும் நீ !
காதலிலும் 
காமத்திலும் 
செல்வத்திலும் 
சுக போகத்திலும் 
எம்மை
மூழ்க வைத்து 
உன்னை 
மறக்க வைப்பவன் நீ !
நன்றி மறந்தாலும் 
எம்மை மறவாமல் 
மன்னிப்பவனும் 
நீ !
எதையெல்லாமோ 
யாரையெல்லாமோ 
எழுதவைத்து 
ரசிப்பவன் நீ !
என்னதான் 
எமை மறந்து 
வாழ்ந்தாலும் 
உன்னையும் 
எழுத வைத்து 
ரட்சிப்பவனும் 
நீ !
இறைவா...
என் 
எண்ணத்திலும் 
என்
எழுத்தின் 
வண்ணத்திலும் 
எனை ஆளும் 
வல்லவன் நீ !
உன்னையே வணங்குகிறேன் 
உன்னிடமே உதவியும் தேடுகிறேன் 
அருள்வாய் 
என்னிறைவா !

Abu Haashima

No comments: