Friday, August 19, 2016

நானும் என் எண்ணங்களும்....!


இரவும் பகலும் அல்ல
மாறி மாறி வருவதற்கு....!
இருளும் ஒளியும் அல்ல
ஒளிர்ந்து மறைந்து போவதற்கு....!

உயர்வும் தாழ்வும் இல்லை
ஏறி இறங்கி வருவதற்கு....!
உழைப்பும் வியர்வையும் அல்ல
ஊதியம்பெற்று உலர்ந்து போவதற்கு....!

உணவும் நீரும் அல்ல
உண்டவுடன் ஜீரணித்து போவதற்கு....!
கனவும் நினைவும் அல்ல
கண்டு மறந்து போவதற்கு.....!

உயிரும் உடலும் அல்ல
வாழ்ந்து மறைந்து போவதற்கு....!
கற்பனையும் நிஜமும் அல்ல
வந்து இருந்து போவதற்கு....!

வரவும் செலவும் அல்ல
மிச்சப் பட்டுப் போவதற்கு....!
நானே எனது எண்ணம்
எனது எண்ணங்களே நான்....!

ராஜா வாவுபிள்ளை

No comments: