Sunday, January 8, 2012

1927ஆண்டிலிருந்து சென்னையில் ‘முசல்மான் ’ கையால் எழுதப்பட்ட செய்தித்தாள்

பாதுகாக்கப் படும் கனவு நினைவாக தொடர்ந்து செயல் வடிவத்தில்
‘முசல்மான் ‘ என்ற கையால் எழுதப்பட்ட செய்தித்தாள் 1927ஆண்டிலிருந்து சென்னையில் .
'Musalman' அநேகமாக உலகின் கடைசி கையால் எழுதப்பட்ட  செய்தித்தாளாக இருக்கலாம் . இது கிட்டத்தட்ட  1927 ல் வெளியிடப்பட்ட அதே வடிவத்தில்   சென்னையிலிருந்து  ஒவ்வொரு நாளும் வெளியிடப்படுகின்றது

The 'Musalman' is probably the last handwritten newspaper in the world. It has been published and read every day in South India's Chennai since 1927 in almost the same form. In the shadow of the Wallajah Mosque in Chennai, a team of six die hard workers still put out this hand-penned paper. Four of them are katibs -- writers dedicated to the ancient art of Urdu calligraphy. It's tough for the die-hard artists of Urdu calligraphy. But the story we tell here is not just of their desperation and despair. The fact is, at the office of 'The Musalman', the oldest Urdu daily in India, no one has ever quit. They work till they pass on. This is the story we tell.  .



உலகின் ஒரே 'கையெழுத்துப்பிரதி தினசரி'... இன்னும் சென்னையில்..!

    பண்டையகால உலகில் பனை ஓலைகளிலோ, துணிகளிலோ பின்னர் காகிதங்களிலோ எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதிகள்தான், தினசரிகள் என்று புழக்கத்தில் இருந்து வந்தன. இந்நிலையில் எழுத்துக்களை பதிக்கவும் ஒரே வகையான பக்கங்களை மிக வேகமான முறையில் பல படிகள் எடுக்கவும் உதவும் அச்சு இயந்திரம் 1450 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன்ஸ் கூட்டன்பெர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட, முதலில் பரவலாக ஐரோப்பா கண்டம் முழுவதும் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது. 


           இது மேலும், பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நவீனமாகி,  பின்னர் உலகம் முழுவதும் பயன்படுத்தத்தொடங்கினர். பொதுவாக அச்சு இயந்திரங்களை உள்ளடக்கிய ஒரு தொழிலகமான அச்சுக்கூடம் என்பது... தினசரிகள், வார இதழ்கள் போன்றவை  பிறக்கும் மிகவும் முக்கியமான இடம்..! இந்த அச்சுப்புரட்சி ஏற்பட்டபின்னர் கையெழுத்துப்பிரதி எழுதும் கலை (calligraphy) என்ற ஒன்றே இல்லாமல் ஆகி, வழக்கொழிந்து போய்விட்டது. யாரும் தினசரிகளை... அவ்வளவு ஏன்... வார, மாத இதழ்களையோ கூட கையினால் எழுதுவதில்லை. அனைவரும் எப்போதோ அச்சுக்கோர்க்க துவங்கி விட்டனர். ஆனாலும், ஐம்பது-நாற்பது வருடங்களுக்கு முன், நம் பல்கலைக்கழக பட்டங்களில் வித்தியாசமாக ஓவியங்கள் போல ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்டு இருக்குமே..! University Degree Certificate -- இப்படி..! நினைவு இருக்கிறதா..? இந்த சான்றிதழ்களை அதற்கென்றே உள்ள பட்டை நிப் உள்ள பேனா வைத்து தொழில்ரீதியாகவே அப்போது கையால் எழுதுவார்கள்.

1 comment:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.முஹம்மத் அலி,

நான் காணாத நல்ல வீடியோக்கள் பகிர்ந்து உள்ளீர்கள். இது பற்றி நான் சென்ற வருடம் மார்ச் மாதம் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளேன். நேரமிருப்பின் படியுங்கள் சகோ.

///உலகின் ஒரே 'கையெழுத்துப்பிரதி தினசரி'... இன்னும் சென்னையில்..!///

http://pinnoottavaathi.blogspot.com/2011/03/blog-post_20.html