Sunday, January 22, 2012

அதிக குழந்தை பெறுங்கள்: சிங்கப்பூர் பிரதமர்!

"சிங்கப்பூர் நாட்டினர் அதிக குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும்" என்று  அந்நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் கேட்டு கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சிங்கப்பூரில் தம்பதியர் அதிக பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் சமூகச் சூழலையும் மனப்போக்கையும் சேர்ந்து செயல்பட்டு உருவாக்க முன்வருமாறு" சிங்கப்பூராருக்கு பிரதமர் லீ சியன் லூங் அறை கூவல் விடுத்து இருக்கிறார்.

"தம்பதியர் அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள மேன்மேலும் நிதி ஊக்குவிப்புகள் பலன் தராது" என்று தெரிவித்துள்ள அவர், "சிங்கப்பூரின் எதிர் காலத்தில் தம்பதியருக்கு அதிக நம்பிக்கை ஏற்படச் செய்வதே அதற்கான ஊக்குவிப்பாக இருக்கும்" என்றார்.

"இந்த தேசிய முயற்சியில் எல்லாரும் சேர்ந்து நமக்கும் நம் குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்கும் தலைசிறந்த தாயகமாகச் சிங்கப்பூரை ஆக்குவோம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source http://www.inneram.com/

No comments: