'கொலவெறி' புகழ் தனுஷுக்கு தமிழ் கவிஞர்கள் கண்டனம்!
Posted by nidurali | Labels: கவிஞர்கள் கண்டனம், தனுஷ் | Posted On Tuesday, January 10, 2012 at 10:55 AM
கவிஞர்களுக்கு மேடையில் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அப்போது, நடிகர் தனுஷ் பாடிய “ஒய் திஸ் கொலை வெறிடி” பாடலைக் கண்டித்தனர். மன்னர்மன்னன் பேசும்போது, "எனது தந்தை பாரதிதாசன், தமிழ் பண்பாட்டுக்கு விரோதமான செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதித்ததில்லை. இன்றைக்கு ஆங்கிலம், தமிழ் கலந்து பாட்டு எழுதுகிறார்கள். அதுபோன்ற பாடலை மக்கள் உங்களிடம் விண்ணப்பம் போட்டு கேட்டார்களா? மக்கள் இந்த பாடல்களை விரும்புகிறார்கள் என்பது அப்பட்டமான பொய்" என்றார்.
கவிஞர் அறிவுமதி பேசும்போது, "கொலை வெறிடி பாடல் தமிழையும், தமிழனையும் கொச்சைப்படுத்தும் பாடலாக உள்ளது" என்றார். கவிக்கோ அப்துல் ரகுமான் பேசும்போது, "நல்ல பாடல்கள் வந்த காலம் போய் 'ஒய் திஸ் கொலை வெறி' பாடல் காலமாகி விட்டது" என்றார்.
Source : http://www.inneram.com/
------------------------------------------------------------------------------------------------------------
ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டி ? பாடுனது வேற யார்ரும் இல்ல நம்ம தனுஷ் தானுங்கோ ...இந்த பாட்டை கேட்டவுடன் அந்த திமிர் உங்களுக்குள்ளையும் வரும் ..... வேற என்ன வரப் போகுது கொலைவெறி தானுங்கோ
| Tweet |








unmaiyai thaane solli irukkiraarkal... pakirvukku nanari..