





இத்தனை பீடிகையும் எதற்காக? வாழ்க்கையை நகர்த்திச் செல்லத் தேர்ந்தெடுத்த தொழிலால் கடந்த காலத்தை எண்ணிப் பெருமூச்சு விடவே முடிகிறது; புத்தகம் வாசிக்க நேரம் கிடைப்பதில்லை என்பதைச் சொல்லவே!. கடைசியாக நான் வாசித்த புத்தகம் என்று சொன்னால், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வசிக்கும் என் இளவல் நூருத்தீன் பரிந்துரைத்து பதிப்பாளார் மூலம் என்க்கு அனுப்பித் தந்த 'நூறு தமிழ்க்கவிஞர்கள்'என்ற நூலே!
தொலைக்காட்சியின் வரவு வாசிக்கும் வழக்கத்தை அழித்து விடும் என்று சொன்னார்கள். அப்படி நிகழ்ந்ததும் உண்மையே! ஆனால் இன்று இணைய தளங்களில் வாசிக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.ஆனால் புத்தகங்களை வாசிக்கும் நிறைவும் அறிவும் இதில் கிடைக்காது என்பது என் துணிபு.


கருணாநிதிக்குப் பிறமொழிக் கலப்பின்றித் தமிழ் பேசத்தெரியாது. இதை வணங்காமுடி விடைப்பகுதியில் முன்னர் சுட்டிக் காட்டியுள்ளோம். கருணாநிதியின் மேடைப்பேச்சு கவரும்படி இருக்கும்; ஆனால் அவரது உரையை உன்னிப்பாகக் கேட்டால் உங்களுக்கே நிறையப் புரியும்.


தம் நாட்டை விட்டு இந்தியாவில் வாழும் திபெத்தியர்கள் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தைத் தடுக்க முயன்றதையும் லண்டனில் ஜோதியைப் பறித்துக்கொண்டு ஓடியதையும் ஆறு நாட்களுக்கு முன்னால் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோவின் இந்திய வருகைக்கு எதிராக நடத்திய அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தையும் நினைவு கூர்ந்தால் புலம் பெயர்ந்தவர்களின் ஆக்ரோஷமும் இன மான உணர்வும் நமக்குப் புரியும்.


உங்களுக்கு ஏன்?
எனக்கு உள்ளங்கை அரித்தால் செலவுதான் வருகிறது.
அமெரிகாவின் லாஸ் ஏஞ்சலிஸில் இருந்து கொண்டு இதற்கெல்லாம் அறிவியல் விளக்கம் வேறு கோருகிறீர்கள்; என்ன சொல்ல? :--))



பெருமை உடைத்து இவ்வுலகு" என்பது குறள்.
உலகில் மட்டுமில்லை; அரசியலிலும் இதுவே உண்மை. இன்றுளோர் நாளை இரார்; நாளை இருப்போர் மற்றைநாள் இலார்; இன்றிலார் நாளை வருவர். கூட்டணிகளும் தேர்தல் போட்டிகளும் அன்றைய வானிலையைப்போல மாறிக் கொண்டே இருப்பவை.அதனால் இன்று சீமான் எடுத்த சபதம்,
“தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவி துச்சாதனன் செந்நீர்,-அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து-குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன் யான்;-இது
செய்யு முன்னே முடியே'னென்று”
பாஞ்சாலி எடுத்த சபதம் இல்லை நிறைவேற்றுவதற்கு.; தமிழநாட்டு அரசியல் சபதம். அது தேர்தல் நேர அரசியல் வானிலையைப் பொறுத்தது. இப்போது ஒன்றும் சொல்ல இயலாது.
'கருணாநிதியை அரசியலை விட்டு ஒழிப்பேன்' என்றும் 'ஜெயலலிதாவை விரட்டுவதே நோக்கம்' என்றும் சபதம் எடுத்துப் பின்னர் அவர்கள் இருவரிடமும் மாறி மாறித் தஞ்சம் புகுந்த புரட்சிப் புயலையும் தமிழ்க்குடிதாங்கியையும் தமிழ்நாடு கண்டுகொண்டுதான் இருக்கிறது
2 ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சி பி ஐ நடத்தும் ரெய்டுகளல் காங்கிரஸ் தி மு க கூட்டனி உடையுமா தொடருமா என்ற எதிர்பார்ப்பே இன்றைய அரசியல் வானிலை.



ரஜினியைப் பார்த்தாவது அரசியலுக்கு வராமல் இருப்பது விஜய்க்கு நல்லது.





சரி! நம்பர் 1, நம்பர் 2 என்பதை எதை வைத்துத் தீர்மானிக்கிறீர்கள்?
படம் வெற்றி பெறுவதை வைத்தா? பண வசூலை வைத்தா? அல்லது ரசிகர் மன்றங்களின் பலத்தை வைத்தா?
நடிகர்கள் பந்தயத்தில் ஓடும் குதிரைகள். ஜெயிக்கும் குதிரை நம்பர் 1. திரையுலகிலும் அரசியலைப்போல வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவன. எனவே நம்பர் இடும் வழக்கம் பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது.


நீங்கள் வினவியுள்ளது உண்மையெனில் ஒருவேளை அவர்கள் தங்களைத் தனியாக அடையாளம் காட்டுவதற்காகச் செய்வார்களோ என்னவோ?


Source:http://www.inneram.com/2010121912590/vanagamudi-answers-19-12-2010
No comments:
Post a Comment