Thursday, December 16, 2010

மோகத்தை மாற்ற தேடு காதலை !


மோகத்தை மாற்ற தேடு காதலை
தேடிய காதலை பாசமாக்கிவிடு
பாசம் வந்து  உன்னை ஒட்
டிக்கொள்ளும்
வசந்தம் வீச வாழ்வு மலரும் .

ஒரு பக்கம் வீசும் காதல் கானல் நீர்
இரு பக்கமும் இணைந்தால் அது தென்றல்

காதல் வர காரணம் இல்லை
மோதல்  வர காரணம் உண்டு 

 
காமம் வர காரியம் உண்டு
காதல் வர காரணம் இல்லை
காமத்தில் காதல் இல்லை
காதலில் காமம்  உண்டு

காமம் நிமிடத்தில் நின்று மறையும்
காதல் காலத்தில் ஒன்றி நிற்கும்

காதலுக்கு மொழி இல்லை மரணமும் இல்லை .

காதல் கவிதை எழுத அனுபவம் வேண்டும் என்ற விதி இல்லை காரணம் காதல் உயிருடன் ஒன்றியது அதனை
அறிய அன்புடன் புகாரியுடன் கேட்டு தெரிந்துகொள். 

இறைவன் மீது கொண்ட காதல் சுவனத்தின் வழி
 எனக்கு ஒரு புத்தகம் கிடைத்திருந்தால் நானும் படித்து  ஏதோ எனக்கு தெரிந்தவரை  ஒரு அணிந்துரை மாலை அணிந்திருபேன் . நான் ஒன்றும் பெரிய எழுதாளன் அல்லது கவிதைக் குயவன் இல்லை என்றாலும் .அன்பான வாழ்த்துகள் .உண்மையுடன் நேசிக்கும் அன்பன் முகம்மது அலி

========================================================================== 
நம்பிக்கை வளர்த்தெடுக்க
நாளெல்லாம் கவியெழுதி
தெம்புக்கோர் பாட்டென்று
திசையெங்கும் பாடவைத்து

அன்புமனம் அமுதளக்க
அன்னைத்தமிழ் எழுதுகிறேன்
அன்புக்கரம் வளைத்துலகை
அரவணைத்து வாழுகின்றேன்
                     ---கவிஞர் புகாரி

No comments: