Saturday, December 4, 2010

வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவ கல்லூரி!

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி தொடங்க இருப்பதாக தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் கூறியுள்ளார். சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

தமிழ்நாடு வக்பு வாரியமும், நீடுர் மிஸ்பாஹு ஹுதா மதராஸாவும்
இணைந்து மருத்துவக் கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த மருத்துவ கல்லூரி மயிலாடுதுறை அருகே உள்ள நீடுரில் அமைக்கப்பட உள்ளது. மருத்துவ கல்லூரி கட்டுவதற்காக நீடுர் மிஸ்பாஹுல் ஹுதா மதராஸா நிர்வாகம் தங்கள் வக்பு நிலத்தில் இருந்து 23 ஏக்கரை நிலத்தை அளிக்க முன்வந்துள்ளது.


மருத்துவக் கல்லூரியை கட்ட ரூ.60 கோடி வரை தேவைப்படுகிறது. இந்த கல்லூரியை ஒரு அறக்கட்டளைதான் நடத்த உள்ளது. ஒரு உறுப்பினர் கட்டணம் ரூ.10 லட்சம் ஆகும். மொத்தம் 170 பேர் வரை தலா ரூ.10 லட்சம் நன்கொடை தருவதாக உறுதி அளித்துள்ளனர். முதல் கட்டமாக 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெற்று மருத்துவ கல்லூரி 2012ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கும்.

இவ்வாறு கூறினார். இச்சந்திப்பின்போது இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச்செயலாளர் எஸ்.எம்.இதயத்துல்லா, வக்பு வாரிய உறுப்பினர் சிக்கந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Source : http://www.inneram.com/2010120512296/wakf-board-to-start-medical-college

1 comment:

Anonymous said...

Let us pray to Allah to make the dreams of muslims true.

It is not easy to open a medical college with less then 300 crores. Please reconsider your budget.