Wednesday, February 17, 2021

திருமண வாழ்த்து

 


திருமண வாழ்த்து

(உயிர் எழுத்துக்களின் வரிசைப்படி)

 

அன்பே என்று அழைத்திடுங்கள்!

 

ஆசைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்!

 

இதயங்களை ஈந்திடுங்கள்!

 

ஈரவிழிகளை துடைத்திடுங்கள்!

 

உறவுகளை நினைத்ததிடுங்கள்!

 

ஊடல்களை மறந்திடுங்கள்!

 

எளிமைக்கு வழிவிடுங்கள்!

 

ஏழ்மைக்கு உதவிடுங்கள்!

 

ஐயங்களை அழித்திங்கள்!

 

ஒரு யுகம் கடந்திடுங்கள்!

 

ஓசையின்றி உயர்ந்திடுங்கள்!

 

ஒளஷதம் நிறைந்து வாழ்ந்திடுங்கள்!

 

 

 

 

அன்பை அறிவை அளவின்றி அளித்து

அகிலம் போற்ற வாழ்

ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று

வாழ்நலம் வரம் பேற்று.

 

இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி

நல்லறம் போற்ற செய்

ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து

வாகை சூடி வெல்

 

 

உண்மை வன்மையாய் காத்துநின் றெவர்க்கும்

வாய்மை வெல்லுமென் றுணர்

ஊரனைத்து முன்புகழ் நாட்டி பேரனைத்தும்

உனதாய் விளங்க நில்

 

எங்கு மெதிலும் சிறப்பாய் சிறந்து

ஓங்கி நிறுத்துநுன் திறமை.

ஏற்றம் மாற்றம் எதிலெனினும் ஏமாற்றம்

அகற்றி வாகை சூழ்

 

 

ஐயமெனும் அரியநோய் எங்குமெதிலும் எவர்க்கும்

மையம் கொளா செய்.

 

ஒற்றுமை கற்று வேற்றுமை அற்று

வற்றாமை செய்உன் மனம்.

ஓய்விலா உழைப்பை என்றும் உரிதாய்

நோயிலா வாழ்க்கை கொள்.

 

 

ஒளவாறே அனைத்தும் சிறப்பாய் மலர்ந்து

சீரிய கொள்கை வெல்.

அஃதே அமைந்திட வேண்டும்

 

நிலவன்

puduvalasa.blogspot.com

No comments: