Sunday, February 14, 2021

தந்தையார் ....

தந்தையார் ....

குடும்பங்கள் குதூகலித்திட

செறிவான அறிவூட்டுகிற

தலைவராம் தந்தை

உழைத்து உயருமிடம்

வாழ்கையெனும் சந்தை ....

பாசமாய் அமருமிடம்

பிள்ளைகளின் சிந்தை

அன்பெனும் காற்றடைத்து

குடும்பமெனும் பந்தை

தோள்களில் சுமப்பது

அற்புதமான விந்தை ....

பெற்றெடுத்த குழந்தைகளை

வளர்க்கும் பருவத்தில்

நடைகள் பயில

கைப்பிடித்து நடத்திடுவார்

உடைகள் அணிவித்து

அழகை ரசித்திடுவார் ....

முன்பக்கம் நமையமர்த்தி

சைக்கிள் ஓட்டுவார்

மழையில் நனைந்தால்

தலையை துவட்டுவார்

உலையில் அரிசியிட

பொருட்கள் திரட்டுவார் ....

தேசம் கடந்தும்

உபதேசம் செய்திடுவார்

நேசம் பொங்கிட

உரையாடி மகிழ்ந்திடுவார் ....

இருட்டையும் திருட்டையும்

பிரிக்க இயலாத

ஆப்பிரிக்க கண்டத்திலும்

அனலும் மணலும்

உறவாடும் வளைகுடாவிலும்

தாய் நாட்டிலும்

உலக தேசங்களிலும்

ஓய்வின்றி பணியாற்றுவார் ....

பிரச்சனைகளை சந்தித்து

வீழ்ந்து எழுந்து

குடும்பம் முன்னேற

ஆழ்ந்து சிந்தித்து

இறையருளால் ஆயுசுக்கும்

உழைத்து வாழ்ந்திடுவார்  ....



அப்துல் கபூர்Abdul Gafoor

13.02.2021 ....

No comments: