Tuesday, February 27, 2018

பின் குறிப்பு

வெந்து தணிந்து
விண்ட பகுதிகளின்
கரிக்கட்டை கொண்டு
அடியும் நுனியுமற்று
கிறுக்கும் கோடுகள்
பின்னலிட 
புது உருவம் காட்டும்.
பிண்டம் கருகிய
முடை நற்றமும்
சுவாசத்தில் அடர்ந்து
ரோமக்கால்களையும் மீட்டும்
முடிச்சை அவிழ்க்கவும்
நீட்சியை அளக்கவும்
சோபலென்றால்
கூடுப்புழுக்கள் யென
இன்னொரு கவிதை எழுதலாம் நான்
வேறு என்ன செய்ய?

No comments: