Friday, February 16, 2018

வாழ்வியல் தத்துவங்கள் ....! ( பாகம் 3 )


சிந்தித்து திட்டமிடு
நியாயமாய் செயல்படு
நிந்தனைகள் நிறுத்திவிடு
நிம்மதி தேடிவரும்
*

சந்தர்ப்பம் தேடிப்பிடி
தளராது செயல்படு
செய்வினை சீர்படும்
செல்வங்கள் சேர்ந்தவரும்

*
விழுந்துவிட்டால் புதைத்துவிடுவது
மனிதனின் இயல்பு
விழுந்ததும் வீறுகொண்டு எழுவது
வீரனுக்கு அழகு.
*

சிரித்துப்பார்
எதிரியின் முகத்திலும்
புன்சிரி எதிரொளிக்கும்
கொடுத்துப்பார்
ஏழையின் வயிறும் உன்னை
மீண்டும் பிரசவிக்கும்
*
மனஇறுக்கம் தவிர்
மகிழ்வுவந்து
மகிழ்வுவந்து குடியேறும்
இருப்பதை விரும்பு
இன்னல்கள் விலகும்
*
நல்லெண்ணம் வளர்
நற்செயல்கள் பு ரி
நன்மைகள் நாடிவரும்
நன்மக்கள் புடைசூழும்

No comments: