Tuesday, October 25, 2016

அறிந்தும் அறியாதது ....!

இருப்பதைத்
தக்கவைத்துக்கொள்ள
அத்தனை முஸ்தீபுகளையும்
அவதானித்தும்
கைவிட்டு
போய்விடும் சிலவும்
இருக்கும் பலவும்
தன்னிருப்பை தெளிவுபடுத்த

இல்லாதைத் தேடியே
இருக்கும் காலத்தை
இலகுவாக இல்லாதாக்கி
அனுபவம் பலவும்பெற்று
ஆனானப்பட்ட வாழ்க்கையின்
ஒவ்வொரு படிகளையும்
அனுமானத்தால் அளந்துசென்று
சிறுமையும் சீற்றமும்
முட்டித் தள்ளிவிட
முண்டியடித்து முன்செல்லவே
முழுமூச்சாய் முயன்றும்
தாங்கும்வரை தோள்சுமந்து
தடுமாறி வீழ்ந்தும்
தவறாமலே எழுந்தும்
சுதாகரித்து முன்செல்லவே
அடிமேல் அடிவைத்து
ஆட்டங்கண்டாலும்
அலுக்காமல் சளைக்காமல்
நானாகவே சென்றடைவேன்
அறிந்தும் அறியாததுபோல்
இவ்வுலகில் இறுமாந்து
வாழ்ந்திருக்கும் தங்குமடம்
முற்றிலுமாய் துறந்து
வந்தவர் எல்லோரும்
போகுமிடம் அவ்விடம்




ராஜா வாவுபிள்ளை

No comments: