Monday, September 14, 2015

மன்னர் என்ற பந்தா இல்லை - Abu Rayyan


மன்னர் என்ற பந்தா இல்லை
கூட அல்லக்கைகள் இல்லை
அடிமைகள் கூட்டம் இல்லை

மெக்கா விபத்தில் காயமடைந்தோரை
நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னதிலும்

அவர்களுக்கு அளிக்கப்படும்
உயர் சிகிச்சையே பற்றி அவர்களிடமே
விசாரித்து தெரிந்து கொண்டதிலும்

காயமடைந்தவர்களில் நடக்க
முடியாதவர்களுக்கு ஹஜ் கடமையே நிறைவேற்றும் பொருட்டு அவர்களுக்கு ஹெலிகாப்டர் வசதி செய்து
தரப்படும் என்று சொன்ன உறுதியிலும்

இனி இது போன்று நடக்காமல்
பார்த்து கொள்ள வேண்டும் என்று
உரியவர்களிடம் அறிவுறுத்தலிலும்

அதை விட மீடியா முன் கை கட்டி நின்று நடந்த தவறுகளுக்கு நானே பொறுப்பேற்று கொள்கிறேன்
என்ற பணிவாகட்டும்

இன்றைய ஆட்சியாளர்களுக்கு எடுத்துகாட்டு
மாட்சிமைக்குரிய இரு புன்னியதலங்களின்
பணியாளர் சவூதி அரேபிய மன்னர்
சல்மான் பின் அப்துல் அஸிஸ்

எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னருக்கும்
அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும்
ஹாஜிகளுக்கும் பாதுகாப்பும் பேரருளும் புரிவானாக...!!! ஆமீம்
  Abu Rayyan

No comments: