Tuesday, September 16, 2014

பிச்சைப் பாத்திரம் [ காணொளி ]

பிச்சைப் பாத்திரம்
பிச்சைக்காரன் என்கிற முத்திரையை
குத்தும் பாத்திரம்

உதவாக்கரைகளுக்கும் உணவளிக்கும்
உன்னதப் பாத்திரம்

இக்கதாபாத்திரத்தில்
சதாஅழுது புலம்பி
கண்கலங்கி நிற்கும் பாத்திரம்



உழைத்து வியர்வை சிந்தாமல்
ஊர்சுற்றி வலம்வந்து
உணவைச் சேகரிக்க
உறுதுணையாயிருக்கும்
ஒப்பற்ற பாத்திரம்

சோம்பேறிகளுக்கு வாழ்வளித்து
சுயநல வாதிகளுக்கு கைகொடுத்து
சாம்ராஜ்யத்தை அழிக்கும் பாத்திரம்

எஞ்சிய உணவையும்
எச்சிலைச் சோற்றையும்
வஞ்சகமில்லாமல் வாங்கி
வயிற்ரை நிரப்பிக் கொள்ள
உதவும் பாத்திரம்

ஒற்றைப் பாத்திரத்தில்
ஒன்பது வகை உணவு
ஓராயிரம் கனவுடன்
ருசித்திடும் நாவு

ஏக்கம் நிறைந்திட்ட
இல்லாதோர்வாழ்வில்
ஏகமாய் மகிழ்விக்கும்
இன்பப் பாத்திரமாம்

யார் வைத்த பெயரோ
அன்றுமுதல் இப்பாத்திரத்துக்கு
பஞ்சமில்லை

இப்பாத்திரம் கையிலிருக்கும் வரை
இவ்விதி என்றும் மாறப்போவதில்லை

பிச்சைப் பாத்திரத்தை தூக்கியெறி
கதாபாத்திரத்தை கையிலெடு
முயற்ச்சிசெய்து முன்னுக்குச் செல்
முன்னேற்றப் பாதையை கவனத்தில் கொள்

ஏற்றமுடன் உழைக்கத் துவங்கு
ஏறெடுத்து பார்க்கும் உலகு

உடல் களைக்கும்வரை உழைத்துப் பழகு
வழி கிடைக்கும்வரை உறங்கமறு

மாற்றமுடன் நீ நடக்க
மதியை கூறாய் தீட்டிக்கொள்
நாட்டமுடன் நடந்தேறும்
நாட்டுமக்கள் திரும்பிப்பார்ப்பர்

போற்றும் உந்தன் திறமையைத்தான்
புகழில் உயர்ந்து நின்றுடுவாய்
தன்னைநம்பு தலை நிமிர்வாய்
தவறாமல்செல் வழிகாண்பாய்

மாற்றத்தை நீநன்கு உணர்ந்திடுவாய்
ஏற்றத்தை நீயென்றும் பெற்றிடுவாய்

தோற்றத்தில் நீ அன்று
பிச்சைக்காரன்
தொய்வின்றி முயற்ச்சித்தால்
வெற்றிக்காரன்

நட்பும் உறவும் வந்து சேர
நாடிய அனைத்தையும்
நீ பெறுவாய்
நலமுடன் என்றும் வாழ்ந்திடுவாய்

 அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 04-09-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. இந்த கவிதை கானொளியில் 4 வது  நிமிடம் 57வது நொடியில் வாசிக்கப்படுகிறது.
நன்றி : http://nijampage.blogspot.

No comments: