Friday, September 12, 2014

நெனச்சான் நெனச்சான் எனை நினைச்சான்

நெனச்சான்
நெனச்சான்
எனை நினைச்சான்
ஒரு கால நேரம் பாக்காமலே நெனச்சான்

ரசிச்சான்
ரசிச்சான்
எனை ரசிச்சான்
என் பேச்சும், மூச்சும் ஓரக் கண்ணால் ரசிச்சான்

நானொரு அழகிய
பம்பரமா
உந்தன் கையிலே
பம்பரமா
உன்னைச் சுத்தற
பம்பரமா, பம்பரமா

நூலில் ஆடற
பம்பரமா
தோளில் ஆடற
பம்பரமா
கண்ணில் ஆடற
பம்பரமா, பம்பரமா ?



கண்ணினோரம்
நெஞ்சினோரம்
காதல் தட்டுதோ

தத்தளிக்கிற
பாய்மரமா
கரையில் தட்டுதோ

அட
கண்ணு ரெண்டும் கட்டிக் கிட்டு
காட்டில் விட்ட தாரு

எட்டுத் திக்கும் எப்பவுமே
காதலென்று ஆச்சு

ஒண்ணு ரெண்டு மூணு கூட
மறந்திங்கு போச்சு

மூச்சுக்குள்ள நீ தானே
கிசு கிசுப் பேச்சு

கெஞ்சிக் கெஞ்சிப் பாத்தேன்
தூக்கம் வரவில்லை
பஞ்சணைக்கு கொஞ்சம் கூட
கூச்சம் வரவில்லை

கண்ணிமையில் கத்தி ரெண்டு
தொங்க விட்ட தொல்லை
என்னுடைய நிலமையை
வேறென்ன சொல்ல



அவளொரு தேவதை
அவளொரு மேனகை
அவளொரு பூங்கிளி
அவளொரு பூங்கொடி

அவளொரு அதிசயம்
அவளொரு பரவசம்
அவளொரு பாச்சரம்
அவளொரு புதுசுரம்



தந்திரனோ
மந்திரனோ
அவனொரு அழகிய சுந்தரனோ

அதிசயமோ
பரவசமோ
அவனது காதலும் என்வசமோ

மயங்கிடுமோ
பயந்திடுமோ
சொல்லிட உதடுகள் தயங்கிடுமோ

பூத்திடுமோ
காய்த்திடுமோ
உயிரிலே காதலின் கனிவருமோ

பாடல் : பம்பரம் ; இசை : சஞ்சே; 
வரிகள்
சேவியர்
குரல் : 
பென்சியா டோன்; ஆல்பம் : மன்மதா, A TBB Production !

தரவிறக்கம் செய்ய : http://www.tbbstars.com/Album/Manmatha%20Album.zip
------------------------------------------------------

To Listen

https://soundcloud.com/writerxavier/manmatha_bambaram_sanje_xavier_bensia-don

No comments: