Sunday, September 21, 2014

என்னோடு பிணங்கி எனை விட்டு பிரிந்தாய்!


என்னோடு பிணங்கி எனை விட்டு பிரிந்தாய்
உன்னோடு பிணங்கியதால் மனம் விட்டு மறைவாயோ

ஞாயிறு மறைந்ததால்
காரிருள் கவ்வும்

மறைந்த ஞாயிறு
திரும்பவும் தோன்ற
காரிருள் போகும்

பிரிந்து போனதால்
உனைக் காண
துழாவும் விழிகள்
வலிமையை அறுத்த பிரிவு
தனிமையை வெறுத்து துவளச் செய்ய
அருளிலா நெஞ்சம் அகம் விட்டு அகன்றதால்
நீரினுள் புகுந்து உலாவியும்
நெருப்பாய் நெஞ்சம் கொளுத்துவதேன்

பிரிந்தவள் சேர்ந்தமையால்
நெஞ்சத்தில் ஒட்டிக் கொண்டாய்
விரிசல் வர வாய்ப்பில்லாமல் போனது
வலிமை வேகமாய் வந்தடைந்தது

No comments: