Sunday, June 16, 2013

ஒரு கவிஞனின் முகவரி

கட்டிவைத்த
கரையில்லா வெள்ளம்

எந்நாளும் நீரோடும்
உயிர் நதி

காலவாய்க் கொட்டுகளுக்குக்
கட்டுப்படாத தேனீ

வெட்டிப்பேச்சு விரும்பாத
வேங்கை

எதற்கும்
வெட்கமின்றி ஒளிவதில்லை
கருத்தோடு நெருப்பெரியும்
காட்டுத்தீ

விழி பார்த்து
உள்மொழி காணும் தேடல்

தூற்றி வெறுப்போர்க்கும்
விளக்கம் நெய்யும் தறி

ரசனையெனும்
அமுதக்கடலில் மிதப்பு
அதில் துடிப்புகளின்
துடுப்புகளாய் அலைவு

பொய்கேட்டுத்
தீயாகும் ரத்தம்

விரோதிக்கும் அன்பளித்து
வாக்களிக்கும் நெஞ்சம்

அன்புடன் புகாரி 
http://anbudanbuhari.blogspot.in/

---------------------------------------------------
ஒரு கவிஞனின் முகவரி

கண்களில் கவர்ச்சி
கருத்தினில் முதிர்ச்சி
பழக்கத்தில் இளமை
பண்பினில் தாய்மை

அவைதனில் அடக்கம்
அன்பினில் பெருக்கம்
உழைப்பினில் பெண்டுலம்
உள்மனம் தாண்டவம்

சகிப்பினில் நெருப்பு
சமத்துவக் காற்று
எடுப்பதில் வானம்
கொடுப்பதில் பூமி

அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.in/
பாசத்துடன் புகாரியின் பேசும் குரல்.
அன்புடன் புகாரி
நான் பிறந்த ஊர்
வானூறி மழை பொழியும் வயலூறி கதிர் வளையும் தேனூறி பூவசையும் தினம்பாடி வண்டாடும் காலூறி அழகுநதி கவிபாடிக் கரையேறும் பாலூறி நிலங்கூட பசியாறும் உரந்தையில் நான் பிறந்தேன்

தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால் சிரிக்கும் பூசணிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.

தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

என் ஊரைப்பற்றி நான் சொல்லிவிட்டேன் என்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும்.
http://anbudanbuhari.blogspot.in/

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

//விரோதிக்கும் அன்பளித்து
வாக்களிக்கும் நெஞ்சம்...//

அருமை... வாழ்த்துக்கள்...