Thursday, April 4, 2013

உனைக் காண நெஞ்சம் நெகிழும்

அழகாய் வீடு கட்டினேன் வாரிசுகள் வாழ
அழகான மனைவி வீட்டோடு வாரிசுகள் போய் விட்டனர்

தாயோடு பிணங்கியதால்
தாயின் மனம்விட்டு மறைவாயோ!

கட்டிய வீட்டில் மனைவி தனியே தவிக்க
கட்டிய விட்டின் கடனை அடைக்க  வெளிநாட்டில் நான்

அருளிலா நெஞ்சம் அகம் விட்டகல
நீருனுள் புகுந்து உலாவியும்
நெருப்பாய் நெஞ்சம் கொளுத்துவதேன்

காரிருளால் நெஞ்சம் தடுமாறுதே
ஞாயிறு வர இருள் மறையும்

உனைக் காண துழாவும் விழிகள்
உனைக் காண நெஞ்சம் நெகிழும்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் வரிகள் ஐயா...

தொடர வாழ்த்துக்கள்....