





அவரைப் பகைத்துக் கொள்ள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் முனையாது; காங்கிரஸைப் பகைத்துக் கொள்ள ஜெயலலிதாவும் முனைய மாட்டார்.


ஹெல்தியாக இருந்தால் "நீண்டநாட்களாக உயிர்வாழும் பாபா" வைப் பின்னர் சந்தித்துக் கொள்ளலாமே என்பதால்தான்.




ஜெயலலிதா போன்றோர் காழ்ப்புணர்ச்சியால் தடுக்க முனையாமல் இருந்தால் சரி.
ஜெயலலிதாவுக்கும் பிரதமராகும் தகுதி இருப்பதாக நடிகர் சரத்குமார் சொல்லியுள்ளார்.





"திகார் சிறையில் இருந்தவாறே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கனிமொழி புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 2ஜி ஊழல் தொடர்பான அனைத்து விவரங்களும் இந்தப் புத்தகத்தில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. 2ஜி ஊழலில் பத்திரிகையாளர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோரின் பங்கு குறித்து கனிமொழி இந்தப் புத்தகத்தில் விரிவாகவே எழுத உள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன."(முழு செய்தி)


"அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்.." என
இளங்கோ கூறியுள்ளார்.
அரசியல் பிழைத்த பாண்டியன் அதற்கு விலையாகத் தன் உயிரைக் கொடுத்தான்.
"வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது"
எனக் காப்பியம் இதைச் சிறப்பித்தாலும் அரசு பிழை செய்ததால் அறங்கூற்றானது எனும் காப்பிய நீதியே இங்கு முதன்மையானது.
கோவலனின் கொலை 'ஊழ்வினை' எனத் தெளிவாகக் கூறிவிட்டது சிலப்பதிகாரம்.
மதுரை எரிப்பு சூழ்வினைச் சிலம்பு காரணமாக நிகழ்ந்தது.
கோவலனின் கொலை 'ஊழ்வினை' எனத் தெளிவாகக் கூறிவிட்டது சிலப்பதிகாரம்.
மதுரை எரிப்பு சூழ்வினைச் சிலம்பு காரணமாக நிகழ்ந்தது.


அழகிரி எப்போது மதுரை வீரன் ஆனார்?
அந்தப் பட்டம் எப்போதுமே "முத்து"வுக்குத்தான்..


பழிவாங்கும் செயல் என்று புலம்புவது அரசியல்.
உண்மையிலேயே அரசியல் பழிதீர்க்கும் செயலாக இருந்தால் இந்நேரம் தளமும் வணங்காமுடியும் ரஸ்ஸலும் அதை அம்பலப்படுத்துவதில் தயக்கம் காட்டப் போவதில்லை.


முன்னர் ஒரு விடையில் நான் சொல்லியுள்ளபடி பொதுவே இக்களங்கள் பலவற்றிலும் எழுதிய கவியரசு கண்ணதாசனே அன்றும் இன்றும் வணங்காமுடிக்குப் பிடித்த எழுத்தாளர்.


இஸ்லாம் என்ன சொல்கிறது என்பது முகமதலிக்குத் தெரியவில்லையெனில் உள்ளூரில் இருக்கும் முஸ்லிம் மத அறிஞர்களிடம் வினவலாம். உள்ளூரில் அத்தகு அறிவார்ந்தோர் இல்லையெனில் இணையத்தில் இதற்கென்றே இருக்கும் தளங்களில் வினவியிருக்க வேண்டும்.
சினிமா மற்றும் மதம் தொடர்பான வினாக்களுக்கு நாம் விடை அளிப்பதில்லை என அறிவித்துள்ளோம். இதை ஒரு விடையிலும் சொல்லியுள்ளோம். அவ்விடை கீழே(http://www.inneram.com/2011012313155/vanagamudi-answers-23-01-2011):
குழந்தைகளுக்கான பால்பற்கள் (ஆரம்பத்தில் முளைப்பது) அனைத்தும் விழுந்து புதியப் பற்கள் வருமா? அல்லது கடவாப் பற்கள் விழாமல் ஏற்கெனவே உள்ள பற்கள் அப்படியே இருந்து விடுமா? - பிரியாமணி, மானாமதுரை.
வணங்காமுடி Master of All subjects எனப்படும் அனைத்துத் துறை வல்லுநன் அல்லன். வணங்காமுடி விடைகள் பகுதிக்கு மருத்துவம், உடலியல், உளவியல் போன்ற துறை சார்ந்த வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. ஒரு வாசகர் முஸ்லிம் மத அறிஞர்களிடம் வினவ வேண்டியதை வணங்காமுடி விடைப் பகுதிக்கு அனுப்பி வினவியுள்ளார்.
அரசியல், சமூகம், பொருளாதாரம், இலக்கியம், கல்வி, குடும்பவியல் இணைந்த அன்றாட நாட்டு நடப்புகள் தொடர்பான வினாக்களுக்கும் பொது அறிவியல், புவியியல் தொடர்பான வினாக்களுக்கும் விடை அளிக்க முடியும். சினிமா மற்றும் மதம் தொடர்பான வினாக்களுக்கு விடை அளிக்க முடியாது.
உடலியல் சார்ந்த வகையில் அமைந்ததுவே உங்கள் வினாவும். நாம் சிறு குழந்தையாய் இருந்தபோது இது நமக்கு நிகழ்ந்தது தான். ஆனால் நமக்கு நினைவிருக்காது. எனவே நம் வீட்டிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ அக்கம் பக்கத்து வீடுகளிலோ வளரும் குழந்தைகளைக் கவனித்தாலே விளங்கி விடுமே?
(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.Source : http://www.inneram.com/
No comments:
Post a Comment